அன்றையதினம் ஜனங்கள் கேட்க மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன்.
பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன?
உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்களென்று லேவியருக்கும் சொன்னேன்என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.
| And it came to pass, | וַיְהִ֡י | wayhî | vai-HEE |
| that when | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| the gates | צָֽלֲלוּ֩ | ṣālălû | tsa-luh-LOO |
| of Jerusalem | שַֽׁעֲרֵ֨י | šaʿărê | sha-uh-RAY |
| began to be dark | יְרֽוּשָׁלִַ֜ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the sabbath, | הַשַּׁבָּ֗ת | haššabbāt | ha-sha-BAHT |
| I commanded | וָאֹֽמְרָה֙ | wāʾōmĕrāh | va-oh-meh-RA |
| that the gates | וַיִּסָּֽגְר֣וּ | wayyissāgĕrû | va-yee-sa-ɡeh-ROO |
| should be shut, | הַדְּלָת֔וֹת | haddĕlātôt | ha-deh-la-TOTE |
| and charged | וָאֹ֣מְרָ֔ה | wāʾōmĕrâ | va-OH-meh-RA |
| that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| they should not | לֹ֣א | lōʾ | loh |
| be opened | יִפְתָּח֔וּם | yiptāḥûm | yeef-ta-HOOM |
| till | עַ֖ד | ʿad | ad |
| after | אַחַ֣ר | ʾaḥar | ah-HAHR |
| the sabbath: | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| and some of my servants | וּמִנְּעָרַ֗י | ûminnĕʿāray | oo-mee-neh-ah-RAI |
| set | הֶֽעֱמַ֙דְתִּי֙ | heʿĕmadtiy | heh-ay-MAHD-TEE |
| I at | עַל | ʿal | al |
| the gates, | הַשְּׁעָרִ֔ים | haššĕʿārîm | ha-sheh-ah-REEM |
| that there should no | לֹֽא | lōʾ | loh |
| burden | יָב֥וֹא | yābôʾ | ya-VOH |
| be brought in | מַשָּׂ֖א | maśśāʾ | ma-SA |
| on the sabbath | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
| day. | הַשַּׁבָּֽת׃ | haššabbāt | ha-sha-BAHT |