அன்றையதினம் ஜனங்கள் கேட்க மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.
அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.
அப்பொழுது நான் ஆசாரியராகிய செலேமியாவையும் வேதபாரகனாகிய சாதோக்கையும் லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன்சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்களென்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.
என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.
அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.
ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.
ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்களென்று லேவியருக்கும் சொன்னேன்என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.
நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.
| Did not | הֲל֣וֹא | hălôʾ | huh-LOH |
| Solomon | עַל | ʿal | al |
| king | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| of Israel | חָטָֽא | ḥāṭāʾ | ha-TA |
| sin | שְׁלֹמֹ֣ה | šĕlōmō | sheh-loh-MOH |
| by | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| these things? | יִשְׂרָאֵ֡ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| yet among many | וּבַגּוֹיִ֣ם | ûbaggôyim | oo-va-ɡoh-YEEM |
| nations | הָֽרַבִּים֩ | hārabbîm | ha-ra-BEEM |
| was | לֹֽא | lōʾ | loh |
| there no | הָיָ֨ה | hāyâ | ha-YA |
| king | מֶ֜לֶךְ | melek | MEH-lek |
| like him, | כָּמֹ֗הוּ | kāmōhû | ka-MOH-hoo |
| who was | וְאָה֤וּב | wĕʾāhûb | veh-ah-HOOV |
| beloved | לֵֽאלֹהָיו֙ | lēʾlōhāyw | LAY-loh-hav |
| of his God, | הָיָ֔ה | hāyâ | ha-YA |
| and God | וַיִּתְּנֵ֣הוּ | wayyittĕnēhû | va-yee-teh-NAY-hoo |
| made | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| him king | מֶ֖לֶךְ | melek | MEH-lek |
| over | עַל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| nevertheless | גַּם | gam | ɡahm |
| even him did outlandish | אוֹת֣וֹ | ʾôtô | oh-TOH |
| women | הֶֽחֱטִ֔יאוּ | heḥĕṭîʾû | heh-hay-TEE-oo |
| cause to sin. | הַנָּשִׁ֖ים | hannāšîm | ha-na-SHEEM |
| הַנָּכְרִיּֽוֹת׃ | hannokriyyôt | ha-noke-ree-yote |