அதென்னவென்றால், அவர்களில் சிலர் நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.
வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.
எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.
அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,
என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,
நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.
அதற்கு அவர்கள் நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.
நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.
| And I said | וָאֹֽמְרָ֣ה | wāʾōmĕrâ | va-oh-meh-RA |
| unto them, We | לָהֶ֗ם | lāhem | la-HEM |
| after our ability | אֲנַ֣חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
| have redeemed | קָ֠נִינוּ | qānînû | KA-nee-noo |
| אֶת | ʾet | et | |
| our brethren | אַחֵ֨ינוּ | ʾaḥênû | ah-HAY-noo |
| the Jews, | הַיְּהוּדִ֜ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
| which were sold | הַנִּמְכָּרִ֤ים | hannimkārîm | ha-neem-ka-REEM |
| unto the heathen; | לַגּוֹיִם֙ | laggôyim | la-ɡoh-YEEM |
| and will ye | כְּדֵ֣י | kĕdê | keh-DAY |
| even | בָ֔נוּ | bānû | VA-noo |
| sell | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| אַתֶּ֛ם | ʾattem | ah-TEM | |
| your brethren? | תִּמְכְּר֥וּ | timkĕrû | teem-keh-ROO |
| or shall they be sold | אֶת | ʾet | et |
| unto us? Then held they their peace, | אֲחֵיכֶ֖ם | ʾăḥêkem | uh-hay-HEM |
| and found | וְנִמְכְּרוּ | wĕnimkĕrû | veh-neem-keh-ROO |
| nothing | לָ֑נוּ | lānû | LA-noo |
| to answer. | וַֽיַּחֲרִ֔ישׁוּ | wayyaḥărîšû | va-ya-huh-REE-shoo |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| מָֽצְא֖וּ | māṣĕʾû | ma-tseh-OO | |
| דָּבָֽר׃ | dābār | da-VAHR |