தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.
அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டவர்கள்.
| And all | וַיֵּאָֽסְפ֤וּ | wayyēʾāsĕpû | va-yay-ah-seh-FOO |
| the people | כָל | kāl | hahl |
| gathered themselves together | הָעָם֙ | hāʿām | ha-AM |
| as one | כְּאִ֣ישׁ | kĕʾîš | keh-EESH |
| man | אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
| into | אֶל | ʾel | el |
| the street | הָ֣רְח֔וֹב | hārĕḥôb | HA-reh-HOVE |
| that | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| was before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the water | שַֽׁעַר | šaʿar | SHA-ar |
| gate; | הַמָּ֑יִם | hammāyim | ha-MA-yeem |
| and they spake | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| unto Ezra | לְעֶזְרָ֣א | lĕʿezrāʾ | leh-ez-RA |
| the scribe | הַסֹּפֵ֔ר | hassōpēr | ha-soh-FARE |
| to bring | לְהָבִ֗יא | lĕhābîʾ | leh-ha-VEE |
| אֶת | ʾet | et | |
| the book | סֵ֙פֶר֙ | sēper | SAY-FER |
| of the law | תּוֹרַ֣ת | tôrat | toh-RAHT |
| of Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
| had commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| to | אֶת | ʾet | et |
| Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |