ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும் மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.
அப்படியே ஜனங்கள் வெளியேபோய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களை போட்டார்கள்.
| Also Jeshua, | וְיֵשׁ֡וּעַ | wĕyēšûaʿ | veh-yay-SHOO-ah |
| and Bani, | וּבָנִ֡י | ûbānî | oo-va-NEE |
| and Sherebiah, | וְשֵׁרֵ֥בְיָ֣ה׀ | wĕšērēbĕyâ | veh-shay-RAY-veh-YA |
| Jamin, | יָמִ֡ין | yāmîn | ya-MEEN |
| Akkub, | עַקּ֡וּב | ʿaqqûb | AH-koov |
| Shabbethai, | שַׁבְּתַ֣י׀ | šabbĕtay | sha-beh-TAI |
| Hodijah, | הֽוֹדִיָּ֡ה | hôdiyyâ | hoh-dee-YA |
| Maaseiah, | מַֽעֲשֵׂיָ֡ה | maʿăśēyâ | ma-uh-say-YA |
| Kelita, | קְלִיטָ֣א | qĕlîṭāʾ | keh-lee-TA |
| Azariah, | עֲזַרְיָה֩ | ʿăzaryāh | uh-zahr-YA |
| Jozabad, | יֽוֹזָבָ֨ד | yôzābād | yoh-za-VAHD |
| Hanan, | חָנָ֤ן | ḥānān | ha-NAHN |
| Pelaiah, | פְּלָאיָה֙ | pĕlāʾyāh | peh-la-YA |
| and the Levites, | וְהַלְוִיִּ֔ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| caused | מְבִינִ֥ים | mĕbînîm | meh-vee-NEEM |
| the people | אֶת | ʾet | et |
| to understand | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| the law: | לַתּוֹרָ֑ה | lattôrâ | la-toh-RA |
| and the people | וְהָעָ֖ם | wĕhāʿām | veh-ha-AM |
| stood in | עַל | ʿal | al |
| their place. | עָמְדָֽם׃ | ʿomdām | ome-DAHM |