பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?
இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.
அப்பொழுது நான் இறங்கிவந்து அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன்பேர் எல்தாத், மற்றவன்பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
| And the Lord | וַיֵּ֨רֶד | wayyēred | va-YAY-red |
| came down | יְהוָ֥ה׀ | yĕhwâ | yeh-VA |
| in a cloud, | בֶּֽעָנָן֮ | beʿānān | beh-ah-NAHN |
| and spake | וַיְדַבֵּ֣ר | waydabbēr | vai-da-BARE |
| unto | אֵלָיו֒ | ʾēlāyw | ay-lav |
| him, and took | וַיָּ֗אצֶל | wayyāʾṣel | va-YA-tsel |
| of | מִן | min | meen |
| the spirit | הָר֙וּחַ֙ | hārûḥa | ha-ROO-HA |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| was upon | עָלָ֔יו | ʿālāyw | ah-LAV |
| him, and gave | וַיִּתֵּ֕ן | wayyittēn | va-yee-TANE |
| it unto | עַל | ʿal | al |
| the seventy | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| elders: | אִ֖ישׁ | ʾîš | eesh |
| הַזְּקֵנִ֑ים | hazzĕqēnîm | ha-zeh-kay-NEEM | |
| and it came to pass, | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| that, when the spirit | כְּנ֤וֹחַ | kĕnôaḥ | keh-NOH-ak |
| rested | עֲלֵיהֶם֙ | ʿălêhem | uh-lay-HEM |
| upon | הָר֔וּחַ | hārûaḥ | ha-ROO-ak |
| them, they prophesied, | וַיִּֽתְנַבְּא֖וּ | wayyitĕnabbĕʾû | va-yee-teh-na-beh-OO |
| and did not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| cease. | יָסָֽפוּ׃ | yāsāpû | ya-sa-FOO |