கர்த்தர் மோசேயை நோக்கி:
நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.
அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
| And they brought up | וַיֹּצִ֜יאוּ | wayyōṣîʾû | va-yoh-TSEE-oo |
| an evil report | דִּבַּ֤ת | dibbat | dee-BAHT |
| of the land | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| they had searched | תָּר֣וּ | tārû | ta-ROO |
| unto | אֹתָ֔הּ | ʾōtāh | oh-TA |
| the children | אֶל | ʾel | el |
| of Israel, | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| saying, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| The land, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| through which | הָאָ֡רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| we have gone | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| to search | עָבַ֨רְנוּ | ʿābarnû | ah-VAHR-noo |
| it, is a land | בָ֜הּ | bāh | va |
| that | לָת֣וּר | lātûr | la-TOOR |
| eateth up | אֹתָ֗הּ | ʾōtāh | oh-TA |
| the inhabitants | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| thereof; and all | אֹכֶ֤לֶת | ʾōkelet | oh-HEH-let |
| the people | יֽוֹשְׁבֶ֙יהָ֙ | yôšĕbêhā | yoh-sheh-VAY-HA |
| that | הִ֔וא | hiw | heev |
| we saw | וְכָל | wĕkāl | veh-HAHL |
| in it | הָעָ֛ם | hāʿām | ha-AM |
| are men | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| of a great stature. | רָאִ֥ינוּ | rāʾînû | ra-EE-noo |
| בְתוֹכָ֖הּ | bĕtôkāh | veh-toh-HA | |
| אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY | |
| מִדּֽוֹת׃ | middôt | mee-dote |