அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.
அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.
அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது.
மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.
ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:
என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.
உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.
உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்.
கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார்.
அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து,
மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள்.
அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான்.
| And all | וַיִּלֹּ֙נוּ֙ | wayyillōnû | va-yee-LOH-NOO |
| the children | עַל | ʿal | al |
| of Israel | מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH |
| murmured | וְעַֽל | wĕʿal | veh-AL |
| against | אַהֲרֹ֔ן | ʾahărōn | ah-huh-RONE |
| Moses | כֹּ֖ל | kōl | kole |
| and against | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Aaron: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and the whole | וַיֹּֽאמְר֨וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| congregation | אֲלֵהֶ֜ם | ʾălēhem | uh-lay-HEM |
| said | כָּל | kāl | kahl |
| unto | הָֽעֵדָ֗ה | hāʿēdâ | ha-ay-DA |
| them, Would God that | לוּ | lû | loo |
| we had died | מַ֙תְנוּ֙ | matnû | MAHT-NOO |
| in the land | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Egypt! | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| or | א֛וֹ | ʾô | oh |
| would God | בַּמִּדְבָּ֥ר | bammidbār | ba-meed-BAHR |
| we had died | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| in this | לוּ | lû | loo |
| wilderness! | מָֽתְנוּ׃ | mātĕnû | MA-teh-noo |