அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,
இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.
பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்டைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.
அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.
இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.
அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.
இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
| Every thing | כָּל | kāl | kahl |
| that openeth | פֶּ֣טֶר | peṭer | PEH-ter |
| the matrix | רֶ֠חֶם | reḥem | REH-hem |
| in all | לְֽכָל | lĕkol | LEH-hole |
| flesh, | בָּשָׂ֞ר | bāśār | ba-SAHR |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| they bring | יַקְרִ֧יבוּ | yaqrîbû | yahk-REE-voo |
| unto the Lord, | לַֽיהוָ֛ה | layhwâ | lai-VA |
| whether it be of men | בָּֽאָדָ֥ם | bāʾādām | ba-ah-DAHM |
| or beasts, | וּבַבְּהֵמָ֖ה | ûbabbĕhēmâ | oo-va-beh-hay-MA |
| shall be | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
| thine: nevertheless | לָּ֑ךְ | lāk | lahk |
| אַ֣ךְ׀ | ʾak | ak | |
| the firstborn | פָּדֹ֣ה | pādō | pa-DOH |
| of man | תִפְדֶּ֗ה | tipde | teef-DEH |
| shalt thou surely | אֵ֚ת | ʾēt | ate |
| redeem, | בְּכ֣וֹר | bĕkôr | beh-HORE |
| and the firstling | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
| of unclean | וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE |
| beasts | בְּכֽוֹר | bĕkôr | beh-HORE |
| shalt thou redeem. | הַבְּהֵמָ֥ה | habbĕhēmâ | ha-beh-hay-MA |
| הַטְּמֵאָ֖ה | haṭṭĕmēʾâ | ha-teh-may-AH | |
| תִּפְדֶּֽה׃ | tipde | teef-DEH |