ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.
உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.
அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.
அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,
கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களனால்,
அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்.
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.
மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.
| And Moses | וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE |
| gave | לָהֶ֣ם׀ | lāhem | la-HEM |
| unto them, even to the children | מֹשֶׁ֡ה | mōše | moh-SHEH |
| of Gad, | לִבְנֵי | libnê | leev-NAY |
| and to the children | גָד֩ | gād | ɡahd |
| of Reuben, | וְלִבְנֵ֨י | wĕlibnê | veh-leev-NAY |
| and unto half | רְאוּבֵ֜ן | rĕʾûbēn | reh-oo-VANE |
| the tribe | וְלַֽחֲצִ֣י׀ | wĕlaḥăṣî | veh-la-huh-TSEE |
| of Manasseh | שֵׁ֣בֶט׀ | šēbeṭ | SHAY-vet |
| the son | מְנַשֶּׁ֣ה | mĕnašše | meh-na-SHEH |
| of Joseph, | בֶן | ben | ven |
| יוֹסֵ֗ף | yôsēp | yoh-SAFE | |
| the kingdom | אֶת | ʾet | et |
| of Sihon | מַמְלֶ֙כֶת֙ | mamleket | mahm-LEH-HET |
| king | סִיחֹן֙ | sîḥōn | see-HONE |
| of the Amorites, | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| and the kingdom | הָֽאֱמֹרִ֔י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| of Og | וְאֶת | wĕʾet | veh-ET |
| king | מַמְלֶ֔כֶת | mamleket | mahm-LEH-het |
| of Bashan, | ע֖וֹג | ʿôg | oɡe |
| the land, | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| with the cities | הַבָּשָׁ֑ן | habbāšān | ha-ba-SHAHN |
| thereof in the coasts, | הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| even the cities | לְעָרֶ֙יהָ֙ | lĕʿārêhā | leh-ah-RAY-HA |
| of the country | בִּגְבֻלֹ֔ת | bigbulōt | beeɡ-voo-LOTE |
| round about. | עָרֵ֥י | ʿārê | ah-RAY |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |