1 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால் கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள். அவரது பரிசுத்த வலது கை மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.

2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார். கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார்.

3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர். தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர்.

4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள். துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.

5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள். சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள்.

6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள். எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள்.

7 கடலும், பூமியும் அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.

8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள். எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்!

9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள். அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார். அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.

Psalm 98 ERV IRV TRV