அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.
அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.
சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.
அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.
| And | Καὶ | kai | kay |
| I beheld, | εἶδον | eidon | EE-thone |
| and | καὶ | kai | kay |
| heard | ἤκουσα | ēkousa | A-koo-sa |
| an | ἑνὸς | henos | ane-OSE |
| angel | ἀγγέλου | angelou | ang-GAY-loo |
| flying | πετωμένου | petōmenou | pay-toh-MAY-noo |
| through | ἐν | en | ane |
| the midst of heaven, | μεσουρανήματι | mesouranēmati | may-soo-ra-NAY-ma-tee |
| saying | λέγοντος | legontos | LAY-gone-tose |
| with a loud | φωνῇ | phōnē | foh-NAY |
| voice, | μεγάλῃ | megalē | may-GA-lay |
| Woe, | Οὐαὶ | ouai | oo-A |
| woe, | οὐαὶ | ouai | oo-A |
| woe, | οὐαὶ | ouai | oo-A |
| to the | τοῖς | tois | toos |
| inhabiters | κατοικοῦσιν | katoikousin | ka-too-KOO-seen |
| of | ἐπὶ | epi | ay-PEE |
| the | τῆς | tēs | tase |
| earth | γῆς | gēs | gase |
| by reason | ἐκ | ek | ake |
| of the | τῶν | tōn | tone |
| other | λοιπῶν | loipōn | loo-PONE |
| voices | φωνῶν | phōnōn | foh-NONE |
| of the of | τῆς | tēs | tase |
| trumpet | σάλπιγγος | salpingos | SAHL-peeng-gose |
| the | τῶν | tōn | tone |
| three | τριῶν | triōn | tree-ONE |
| angels, | ἀγγέλων | angelōn | ang-GAY-lone |
| which | τῶν | tōn | tone |
| are yet | μελλόντων | mellontōn | male-LONE-tone |
| to sound! | σαλπίζειν | salpizein | sahl-PEE-zeen |