உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார்.
| And the man | וַיַּ֗עַן | wayyaʿan | va-YA-an |
| that stood | הָאִ֛ישׁ | hāʾîš | ha-EESH |
| among | הָעֹמֵ֥ד | hāʿōmēd | ha-oh-MADE |
| the myrtle trees | בֵּין | bên | bane |
| answered | הַהֲדַסִּ֖ים | hahădassîm | ha-huh-da-SEEM |
| and said, | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| These | אֵ֚לֶּה | ʾēlle | A-leh |
| are they whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| the Lord | שָׁלַ֣ח | šālaḥ | sha-LAHK |
| hath sent | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| to walk | לְהִתְהַלֵּ֖ךְ | lĕhithallēk | leh-heet-ha-LAKE |
| to and fro through the earth. | בָּאָֽרֶץ׃ | bāʾāreṣ | ba-AH-rets |