1 ⁽நான் மானிடரின் மொழிகளிலும்␢ வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்␢ அன்பு எனக்கில்லையேல்␢ ஒலிக்கும் வெண்கலமும்␢ ஓசையிடும் தாளமும் போலாவேன்.⁾

2 ⁽இறைவாக்கு உரைக்கும் ஆற்றல்␢ எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்␢ அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், § அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,␢ மலைகளை இடம்பெயரச்␢ செய்யும் அளவுக்கு நிறைந்த␢ நம்பிக்கை கொண்டிருப்பினும்␢ என்னிடம் அன்பு இல்லையேல்␢ நான் ஒன்றுமில்லை.⁾

3 ⁽என் உடைமையை எல்லாம்␢ நான் வாரி வழங்கினாலும்␢ என் உடலையே␢ சுட்டெரிப்பதற்கென* ஒப்புவித்தாலும்␢ என்னிடம் அன்பு இல்லையேல்␢ எனக்குப் பயன் ஒன்றுமில்லை.⁾

4 ⁽அன்பு பொறுமையுள்ளது;␢ நன்மை செய்யும்;␢ பொறாமைப்படாது;␢ தற்புகழ்ச்சி கொள்ளாது;␢ இறுமாப்பு அடையாது.⁾

5 ⁽அன்பு இழிவானதைச் செய்யாது;␢ தன்னலம் நாடாது;␢ எரிச்சலுக்கு இடம் கொடாது;␢ தீங்கு நினையாது.⁾

6 ⁽அன்பு தீவினையில் மகிழ்வுறாது;␢ மாறாக உண்மையில் அது மகிழும்.⁾

7 ⁽அன்பு அனைத்தையும்␢ பொறுத்துக் கொள்ளும்;␢ அனைத்தையும் நம்பும்;␢ அனைத்தையும்␢ எதிர்நோக்கி இருக்கும்;␢ அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.⁾

8 ⁽இறைவாக்கு உரைக்கும் கொடை␢ ஒழிந்துபோம்;␢ பரவசப்பேச்சு பேசும் கொடையும்␢ ஓய்ந்துபோம்;␢ அறிவும் அழிந்துபோம்.␢ ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது.⁾

9 ⁽ஏனெனில், நமது அறிவு␢ அரைகுறையானது;␢ நாம் அரைகுறையாகவே␢ இறைவாக்கும் உரைக்கிறோம்.⁾

10 ⁽நிறைவானது வரும் போது␢ அரைகுறையானது ஒழிந்துபோம்.⁾

11 ⁽நான் குழந்தையாய் இருந்தபோது␢ குழந்தையைப்போலப் பேசினேன்;␢ குழந்தையின் மனநிலையைப்␢ பெற்றிருந்தேன்;␢ குழந்தையைப்போல எண்ணினேன்.␢ நான் பெரியவனானபோது␢ குழந்தைக்குரியவற்றை␢ அறவே விட்டுவிட்டேன்.⁾

12 ⁽ஏனெனில், இப்போது நாம்␢ கண்ணாடியில் காண்பதுபோல்␢ மங்கலாய்க் காண்கிறோம்;␢ ஆனால் அப்போது␢ நாம் நேரில் காண்போம்.␢ இப்போது நான்␢ அரைகுறையாய் அறிகிறேன்;␢ அப்போது கடவுள்␢ என்னை அறிந்துள்ளதுபோல்␢ முழுமையாய் அறிவேன்.⁾

13 ⁽ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு,␢ அன்பு ஆகிய மூன்றுமே␢ நிலையாய் உள்ளன.␢ இவற்றுள் அன்பே தலைசிறந்தது.⁾

1 Corinthians 13 ERV IRV TRV