பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.
தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.
இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.
| And the Lord | וַיֵּרָ֤א | wayyērāʾ | va-yay-RA |
| appeared | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| unto | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| him, and said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Go not down | אַל | ʾal | al |
| תֵּרֵ֣ד | tērēd | tay-RADE | |
| into Egypt; | מִצְרָ֑יְמָה | miṣrāyĕmâ | meets-RA-yeh-ma |
| dwell | שְׁכֹ֣ן | šĕkōn | sheh-HONE |
| in the land | בָּאָ֔רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| I shall tell | אֹמַ֥ר | ʾōmar | oh-MAHR |
| thee of: | אֵלֶֽיךָ׃ | ʾēlêkā | ay-LAY-ha |