Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 3:12 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 3 Ecclesiastes 3:12

பிரசங்கி 3:12
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

Tamil Indian Revised Version
மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன்.

Thiru Viviliam
எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன்.

Ecclesiastes 3:11Ecclesiastes 3Ecclesiastes 3:13

King James Version (KJV)
I know that there is no good in them, but for a man to rejoice, and to do good in his life.

American Standard Version (ASV)
I know that there is nothing better for them, than to rejoice, and to do good so long as they live.

Bible in Basic English (BBE)
I am certain that there is nothing better for a man than to be glad, and to do good while life is in him.

Darby English Bible (DBY)
I know that there is nothing good for them but to rejoice and to do well in their life;

World English Bible (WEB)
I know that there is nothing better for them than to rejoice, and to do good as long as they live.

Young’s Literal Translation (YLT)
I have known that there is no good for them except to rejoice and to do good during their life,

பிரசங்கி Ecclesiastes 3:12
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
I know that there is no good in them, but for a man to rejoice, and to do good in his life.

יָדַ֕עְתִּיyādaʿtîya-DA-tee
כִּ֛יkee
אֵ֥יןʾênane
ט֖וֹבṭôbtove
בָּ֑םbāmbahm
כִּ֣יkee
אִםʾimeem
לִשְׂמ֔וֹחַliśmôaḥlees-MOH-ak
וְלַעֲשׂ֥וֹתwĕlaʿăśôtveh-la-uh-SOTE
ט֖וֹבṭôbtove
בְּחַיָּֽיו׃bĕḥayyāywbeh-ha-YAIV

Cross Reference

பிரசங்கி 3:22
இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மையில்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

சங்கீதம் 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

1 தீமோத்தேயு 6:18
நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,

1 தெசலோனிக்கேயர் 5:15
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:35
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

லுூக்கா 11:41
உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.

ஏசாயா 64:5
மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும் உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்.

பிரசங்கி 9:7
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.

உபாகமம் 28:63
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யுமளவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள்.


Tags மகிழ்ச்சியாயிருப்பதும் உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்
Ecclesiastes 3:12 in Tamil Concordance Ecclesiastes 3:12 in Tamil Interlinear Ecclesiastes 3:12 in Tamil Image