Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amos 9:1 in Tamil

Home Bible Amos Amos 9 Amos 9:1

ஆமோஸ் 9:1
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.

Tamil Indian Revised Version
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி தூணின் உச்சியை அடித்து, அவைகளை அவர்கள் எல்லோருடைய தலையின்மேலும் விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.

Tamil Easy Reading Version
நான் என் ஆண்டவர் பலிபீடத்தின் அருகில் நிற்பதைக் கண்டேன். அவர், “நீ, வாசல் நிலைகள் அசையும்படி தூண்களை அடித்து, அவற்றை அவர்கள் எல்லாருடைய தலையின் மேலும் விழ உடைத்துப்போடு. ஜனங்களில் எவராவது உயிரோடு மீந்தால், பிறகு நான் அவர்களை வாளால் கொல்வேன். ஒருவன் வெளியே ஓடிவிடலாம். ஆனாலும் அவன் தப்பமுடியாது. ஜனங்களில் ஒருவரும் தப்ப இயலாது.

Thiru Viviliam
பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்:⁽ தூணின் முகட்டை இடித்துப் போடு;␢ மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்;␢ மக்கள் அனைவருடைய தலையிலும்␢ அதை உடைத்துத் தள்ளு;␢ அவர்களுள் எஞ்சியிருப்போரை␢ நான் வாளால் கொன்றுபோடுவேன்;␢ அவர்களில் எவரும்␢ ஓடிப்போக மாட்டார்;␢ ஒருவர் கூடத்␢ தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.⁾

Title
பலிபீடத்தின் அருகில் கர்த்தர் நிற்கும் தரிசனம்

Other Title
ஆண்டவரின் தீர்ப்புகள்

Amos 9Amos 9:2

King James Version (KJV)
I saw the LORD standing upon the altar: and he said, Smite the lintel of the door, that the posts may shake: and cut them in the head, all of them; and I will slay the last of them with the sword: he that fleeth of them shall not flee away, and he that escapeth of them shall not be delivered.

American Standard Version (ASV)
I saw the Lord standing beside the altar: and he said, Smite the capitals, that the thresholds may shake; and break them in pieces on the head of all of them; and I will slay the last of them with the sword: there shall not one of them flee away, and there shall not one of them escape.

Bible in Basic English (BBE)
I saw the Lord stationed by the side of the altar, giving blows to the tops of the pillars so that the doorsteps were shaking: and he said, I will let all of them be broken with earth-shocks; I will put the last of them to the sword: if any one of them goes in flight he will not get away, not one of them will be safe.

Darby English Bible (DBY)
I saw the Lord standing upon the altar; and he said, Smite the chapiter that the thresholds may shake; and break all of them in pieces, in the head; and I will slay the last of them with the sword: he that fleeth of them shall not get away by flight, and he that escapeth of them shall not be delivered.

World English Bible (WEB)
I saw the Lord standing beside the altar, and he said, “Strike the tops of the pillars, that the thresholds may shake; and break them in pieces on the head of all of them; and I will kill the last of them with the sword: there shall not one of them flee away, and there shall not one of them escape.

Young’s Literal Translation (YLT)
I have seen the Lord standing by the altar, and He saith: `Smite the knob, and the thresholds shake, And cut them off by the head — all of them, And their posterity with a sword I do slay, Not flee to them doth the fleer, Nor escape to them doth a fugitive.

ஆமோஸ் Amos 9:1
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.
I saw the LORD standing upon the altar: and he said, Smite the lintel of the door, that the posts may shake: and cut them in the head, all of them; and I will slay the last of them with the sword: he that fleeth of them shall not flee away, and he that escapeth of them shall not be delivered.

רָאִ֨יתִיrāʾîtîra-EE-tee
אֶתʾetet
אֲדֹנָ֜יʾădōnāyuh-doh-NAI
נִצָּ֣בniṣṣābnee-TSAHV
עַֽלʿalal
הַמִּזְבֵּ֗חַhammizbēaḥha-meez-BAY-ak
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
הַ֨ךְhakhahk
הַכַּפְתּ֜וֹרhakkaptôrha-kahf-TORE
וְיִרְעֲשׁ֣וּwĕyirʿăšûveh-yeer-uh-SHOO
הַסִּפִּ֗יםhassippîmha-see-PEEM
וּבְצַ֙עַם֙ûbĕṣaʿamoo-veh-TSA-AM
בְּרֹ֣אשׁbĕrōšbeh-ROHSH
כֻּלָּ֔םkullāmkoo-LAHM
וְאַחֲרִיתָ֖םwĕʾaḥărîtāmveh-ah-huh-ree-TAHM
בַּחֶ֣רֶבbaḥerebba-HEH-rev
אֶהֱרֹ֑גʾehĕrōgeh-hay-ROɡE
לֹֽאlōʾloh
יָנ֤וּסyānûsya-NOOS
לָהֶם֙lāhemla-HEM
נָ֔סnāsnahs
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִמָּלֵ֥טyimmālēṭyee-ma-LATE
לָהֶ֖םlāhemla-HEM
פָּלִֽיט׃pālîṭpa-LEET

Cross Reference

சங்கீதம் 68:21
மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.

யோவான் 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

ஆபகூக் 3:13
உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.

ஆமோஸ் 3:14
நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.

ஏசாயா 6:3
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

ஏசாயா 6:1
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13
மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.

யோவான் 1:32
பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.

சகரியா 11:1
லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத்திற.

செப்பனியா 2:14
அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.

ஆமோஸ் 2:14
அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.

எசேக்கியேல் 10:4
கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.

எசேக்கியேல் 9:2
அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்.

எசேக்கியேல் 1:28
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

எரேமியா 48:44
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 30:16
அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.

ஏசாயா 24:17
தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும் கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.

2 நாளாகமம் 18:18
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.


Tags ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன் அவர் நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன் அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை
Amos 9:1 in Tamil Concordance Amos 9:1 in Tamil Interlinear Amos 9:1 in Tamil Image