1 இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்; உங்களுக்கு எதிராக — ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக — ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்;

2 ⁽“உலகத்திலுள்ள எல்லா␢ மக்களினங்களுக்குள்ளும்␢ உங்களைத்தான் நான் சிறப்பாக␢ அறிந்துகோண்டேன்;␢ ஆதலால், உங்கள்␢ தீச்செயல் அனைத்திற்காகவும்␢ நான் உங்களைத் தண்டிப்பேன்.⁾

3 ⁽தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல்␢ இருவர் சேர்ந்து நடப்பார்களோ?⁾

4 ⁽இரை அகப்படாமல் இருக்கும்போது␢ காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ?␢ ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே␢ குகையிலிருந்து இளஞ்சிங்கம்␢ முழக்கம் செய்யுமோ?⁾

5 ⁽வேடன் தரையில்␢ வலைவிரிக்காதிருக்கும்போதே␢ பறவை கண்ணியில்␢ சிக்கிக்கொள்வதுண்டோ?␢ ஒன்றுமே சிக்காதிருக்கும்போது␢ பொறி தரையைவிட்டுத்␢ துள்ளுவதுண்டோ?⁾

6 ⁽நகரில் எக்காளம் ஊதப்படுமானால்,␢ மக்கள் அஞ்சி நடுங்காமல்␢ இருப்பார்களோ?␢ ஆண்டவர் அனுப்பவில்லையெனில்,␢ நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?⁾

7 ⁽தம் ஊழியர்களாகிய␢ இறைவாக்கினர்களுக்குத்␢ தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல்,␢ தலைவராகிய ஆண்டவர்␢ ஏதும் செய்வதில்லை.⁾

8 ⁽சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;␢ அஞ்சி நடுங்காதவர் எவர்?␢ தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க,␢ இறைவாக்கு உரைக்காதவர் எவர்?⁾

9 ⁽“அசீரியாவின் கோட்டைகள் மேலும்␢ எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும்␢ நின்றுகொண்டு␢ இவ்வாறு பறைசாற்று;␢ சமாரியாவின் மலைகள்மேல்␢ வந்து கூடுங்கள்;␢ அங்கு ஏற்படும் குழப்பங்களையும்␢ நடக்கும் கொடுமைகளையும்␢ பாருங்கள்.⁾

10 ⁽நலமானதைச் செய்ய␢ அவர்களுக்குத் தெரிவ தில்லை”␢ என்கிறார் ஆண்டவர்.␢ “அவர்கள் தங்கள் கோட்டைகளை␢ வன்முறைகளாலும்␢ கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.”⁾

11 ⁽ஆகையால், தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ “பகைவன் ஒருவன் வந்து␢ நாட்டைச் சூழ்ந்து கொள்வான்;␢ அரண்களையெல்லாம்␢ தரைமட்டமாக்குவான்;␢ உங்கள் கோட்டைகள்␢ கொள்ளையிடப்படும்.⁾

12 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “சிங்கத்தின் வாயிலிருந்து␢ இடையன் தன் ஆட்டின்␢ இரண்டு கால்களையோ␢ காதின் ஒருபகுதியையோ␢ பிடுங்கி எடுப்பது போல,␢ சமாரியாவில் குடியிருந்து,␢ பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும்␢ சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள்␢ விடுவிக்கப்படுவதும் இருக்கும்.”⁾

13 ⁽“கேளுங்கள்;␢ யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச்␢ சான்று பகருங்கள்,”␢ என்கிறார் தலைவரும்␢ படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.⁾

14 ⁽“இஸ்ரயேலை␢ அதன் குற்றங்களுக்காகத்␢ தண்டிக்கும் நாளில்,␢ பெத்தேலில் உள்ள␢ பலிபீடங்களை அழிப்பேன்;␢ பலிபீடத்தின் கொம்புகள்␢ வெட்டப்பட்டுத் தரையில் விழும்.⁾

15 ⁽குளிர்கால வேனிற்கால மாளிகைகளை␢ இடித்துத் தள்ளுவேன்;␢ தந்தத்தாலான வீடுகள்␢ அழிந்து போகும்;␢ மாபெரும் இல்லங்களும்␢ பாழாய்ப் போகும்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Amos 3 ERV IRV TRV