1 தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

2 நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான்⁽“இறைவனாகிய ஆண்டவரே,␢ மன்னித்தருளும்;␢ உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்;␢ யாக்கோபு எப்படி␢ நிலைநிற்கப் போகிறான்?␢ அவன் மிகச் சிறியவன் அல்லவா!”␢ என்றேன்.⁾

3 ⁽ஆண்டவரும் இதைக் குறித்து␢ மனம் மாறினார்;␢ ‘இது நிகழாது,’ என்றார்␢ தலைவராகிய ஆண்டவர்.”⁾

4 ⁽தலைவராகிய ஆண்டவர்␢ எனக்குக் காட்டிய காட்சி இதுவே:␢ “தலைவராகிய ஆண்டவர்␢ தண்டனைத் தீர்ப்பாக␢ நெருப்பு மழையை வருவித்தார்;␢ அந்த நெருப்பு␢ ஆழ்கடலை வற்றச் செய்து␢ நிலத்தையும் விழுங்கிக்␢ கொண்டிருந்தது.⁾

5 ⁽நான்,‘தலைவராகிய ஆண்டவரே,␢ இதை நிறுத்தியருளும்;␢ உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்;␢ யாக்கோபு எப்படி␢ நிலைநிற்கப் போகின்றான்?␢ அவன் மிகச் சிறியவன் அல்லவா!’␢ என்றேன்.⁾⒫

6 ⁽ஆண்டவரும் இதைக் குறித்து␢ மனம் மாறினார்;␢ ‘இதுவும் நிகழாது,’ என்றார்␢ தலைவராகிய ஆண்டவர்.”⁾

7 ⁽ஆண்டவர் எனக்குக் காட்டிய␢ காட்சி இதுவே:␢ “தூக்கு நூல் குண்டின் துணைகொண்டு␢ கட்டப்பட்ட ஒரு மதில் அருகில்␢ அவர் நின்று கொண்டிருந்தார்.␢ அவர் கையில் ஒரு␢ தூக்கு நூல் குண்டு இருந்தது.⁾

8 ⁽‘ஆமோஸ்!␢ நீ காண்பதென்ன?’ என்று␢ ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.␢ நான், ‘அது தூக்கு␢ நூல் குண்டு’ என்றேன்.␢ தலைவர் தொடர்ந்து சொன்னார்:␢ ‘தூக்கு நூல் குண்டை␢ என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில்␢ தொங்கவிடப் போகிறேன்;␢ இனி நான் அவர்கள் நடுவே␢ ஒருபோதும் கடந்து␢ செல்லப்போவதில்லை’.⁾

9 ⁽ஈசாக்கின் உயர்ந்த இடங்கள்␢ பாழாக்கப்படும்;␢ இஸ்ரயேலின் புனித இடங்கள்␢ பாலைவெளி ஆக்கப்படும்;␢ எரொபவாம் வீட்டாருக்கு எதிராக␢ நான் வாளெடுத்து வருவேன்.”⁾

10 பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான்.

11 அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், ‘எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்’ என்று ஆமோஸ் சொல்லுகிறான்.”

12 பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.

13 பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.⒫

14 ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.

15 ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.⒫

16 ⁽எனவே, இப்பொழுது␢ ஆண்டவரின் வாக்கைக் கேள்:␢ ‘இஸ்ரயேலுக்கு எதிராக␢ இறைவாக்கு உரைக்காதே;␢ ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப்␢ பேசாதே’ என்று நீ சொல்கிறாய்!⁾

17 ⁽ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:␢ “உன் மனைவி நகரில்␢ விலைமகளாய் இருப்பாள்;␢ உன் புதல்வர் புதல்வியர்␢ வாளால் மடிவர்;␢ உன் நிலபுலம்␢ பங்கு போட்டுக் கொள்ளப்படும்,␢ நீயோ புனிதமற்ற நாட்டிலே␢ மாண்டு போவாய்;␢ இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே␢ அடிமையாகக் கொண்டு போகப்படும்.”⁾

Amos 7 ERV IRV TRV