1 பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்:⁽ தூணின் முகட்டை இடித்துப் போடு;␢ மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்;␢ மக்கள் அனைவருடைய தலையிலும்␢ அதை உடைத்துத் தள்ளு;␢ அவர்களுள் எஞ்சியிருப்போரை␢ நான் வாளால் கொன்றுபோடுவேன்;␢ அவர்களில் எவரும்␢ ஓடிப்போக மாட்டார்;␢ ஒருவர் கூடத்␢ தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.⁾

2 ⁽பாதாளம் வரையில்␢ அவர்கள் இறங்கினாலும்␢ அங்கிருந்தும் என் கை␢ அவர்களை இழுத்து வரும்;␢ வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும்,␢ அங்கிருந்தும் நான்␢ அவர்களைப் பிடித்து வருவேன்;⁾

3 ⁽கர்மேல் மலையுச்சியில் .␢ ஓடி ஒளிந்துகொண்டாலும்,␢ அவர்களைத் தேடிப் பிடித்து␢ அங்கிருந்து கொண்டு வருவேன்;␢ என் கண்களுக்குத் தப்பி␢ ஆழ்கடலில் மறைந்தாலும்,␢ அங்கு அவர்களைக் கடிக்கும்படி␢ பாம்புக்குக் கட்டளையிடுவேன்.⁾

4 ⁽தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க்␢ கொண்டு போகப்பட்டாலும்,␢ அங்கே அவர்களைக் கொல்லும்படி␢ வாளுக்கு ஆணையிடுவேன்;␢ அவர்களுக்கு நன்மை செய்யாது␢ தீங்கு செய்வதிலேயே␢ நான் கண்ணாயிருப்பேன்.⁾

5 ⁽படைகளின் கடவுளாகிய␢ ஆண்டவர் தொட␢ மண்ணுலகம் பாகாய் உருகுகின்றது;␢ அதில் வாழ்வோர் அனைவரும்␢ புலம்புகின்றனர்:␢ நாடு முழுவதும்␢ நைல்நதியின் வெள்ளமென␢ சுழற்றியெறியப்படுகின்றது;␢ எகிப்து நாட்டின் நைல்நதிபோல்␢ அலைக்கழிக்கப்பட்டு அடங்குகின்றது.⁾

6 ⁽அவர் வானத்தில்␢ தம் மேலறைகளைக் கட்டுகின்றார்;␢ வானின் வளைவை␢ நிலத்தில் அடித்தளமிட்டு␢ நாட்டுகின்றார்;␢ கடல்களின் நீரை முகந்தெடுத்து␢ நிலத்தின்மேல் பொழிகின்றார்;␢ “ஆண்டவர்” என்பது அவரது பெயராம்.⁾

7 ⁽“இஸ்ரயேல் மக்களே,␢ நீங்கள் எனக்கு␢ எத்தியோப்பியரைப்␢ போன்றவர்கள்தானே?␢ இஸ்ரயேல் மக்களை␢ எகிப்து நாட்டினின்றும்,␢ பெலிஸ்தியரைக் கப்தோரிலிருந்தும்,␢ சிரியரைக் கீரிலிருந்தும்␢ நான் அழைத்து வரவில்லையா?”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

8 ⁽தலைவராகிய ஆண்டவரின் கண்கள்␢ பாவம் செய்யும் அரசை␢ உற்றுப் பார்க்கின்றன;␢ “மண்ணுலகில் இராதபடி␢ அதை நான் அழித்து விடுவேன்.␢ ஆயினும், யாக்கோபின் வீட்டாரை␢ நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

9 ⁽நான் ஆணை பிறப்பிப்பேன்;␢ எல்லா மக்களினங்கள் நடுவிலும்␢ இஸ்ரயேல் வீட்டாரைச்␢ சல்லடையில்␢ தானியத்தைச் சலிப்பதுபோலச்␢ சலிக்கப் போகின்றேன்;␢ ஆயினும், கோதுமை மணி ஒன்றும்␢ தரையில் விழாது.⁾

10 ⁽“தீமை எங்களை அணுகாது,␢ எங்கள்மேல் வராது” என்று␢ என் மக்களுள்␢ எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ,␢ அவர்கள் அனைவரும்␢ வாளால் மடிவார்கள்.⁾

11 ⁽“அந்நாள்களில்␢ விழுந்துகிடக்கும்␢ தாவீதின் கூடாரத்தை␢ மீண்டும் உயர்த்துவேன்.␢ அதிலுள்ள கிழிசல்களைப்␢ பழுதுபார்த்துச்␢ சிதைந்தவற்றைச் சீர்படுத்திப்␢ பண்டை நாளில் இருந்ததுபோல்␢ மீண்டும் கட்டியெழுப்புவேன்.⁾

12 ⁽அப்பொழுது,␢ ஏதோமில் எஞ்சியிருப்போரையும்␢ எனது பெயரைத் தாங்கியிருக்கும்␢ பிற இனத்தார் அனைவரையும்␢ அவர்கள் தங்கள்␢ உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,”␢ என்கிறார்␢ இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.⁾

13 ⁽“இதோ! நாள்கள் வரப்போகின்றன;␢ அப்போது,␢ அறுவடை செய்வோரை உழுவோரும்,␢ கனி பிழிவோரை விதைப்போரும்␢ தொடர்ந்து முன்னேறுவர்;␢ மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்;␢ குன்றுகள்தோறும்␢ அது வழிந்தோடும்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

14 ⁽“என் மக்களாகிய இஸ்ரயேலை␢ முன்னைய நன்னிலைக்குக்␢ கொண்டுவருவேன்;␢ அவர்கள் பாழடைந்த நகர்களைத்␢ திரும்பக் கட்டி␢ அவற்றில் குடியேறுவார்கள்;␢ திராட்சைத் தோட்டங்களை அமைத்து␢ அவற்றின் கனிரசத்தை␢ அருந்துவார்கள்.␢ பழத்தோட்டங்கள் அமைத்து␢ அவற்றின் கனிகளை உண்பார்கள்.⁾

15 ⁽அவர்களைத் தங்கள் நாட்டில்␢ மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்;␢ நான் அவர்களுக்கு அளித்திருக்கும்␢ நாட்டிலிருந்து␢ இனி ஒருபோதும் அவர்கள்␢ பிடுங்கப்படமாட்டார்கள்,” என்கிறார்␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.⁾

Amos 9 ERV IRV TRV