பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரியகல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும்,
அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.
ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
| These | אֵ֠לֶּה | ʾēlle | A-leh |
| shall stand | יַֽעַמְד֞וּ | yaʿamdû | ya-am-DOO |
| upon | לְבָרֵ֤ךְ | lĕbārēk | leh-va-RAKE |
| mount | אֶת | ʾet | et |
| Gerizim | הָעָם֙ | hāʿām | ha-AM |
| to bless | עַל | ʿal | al |
| הַ֣ר | har | hahr | |
| the people, | גְּרִזִ֔ים | gĕrizîm | ɡeh-ree-ZEEM |
| when ye are come over | בְּעָבְרְכֶ֖ם | bĕʿobrĕkem | beh-ove-reh-HEM |
| אֶת | ʾet | et | |
| Jordan; | הַיַּרְדֵּ֑ן | hayyardēn | ha-yahr-DANE |
| Simeon, | שִׁמְעוֹן֙ | šimʿôn | sheem-ONE |
| and Levi, | וְלֵוִ֣י | wĕlēwî | veh-lay-VEE |
| and Judah, | וִֽיהוּדָ֔ה | wîhûdâ | vee-hoo-DA |
| and Issachar, | וְיִשָּׂשכָ֖ר | wĕyiśśokār | veh-yee-soh-HAHR |
| and Joseph, | וְיוֹסֵ֥ף | wĕyôsēp | veh-yoh-SAFE |
| and Benjamin: | וּבִנְיָמִֽן׃ | ûbinyāmin | oo-veen-ya-MEEN |