அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| Go on | עֲבֹר֙ | ʿăbōr | uh-VORE |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the people, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| and take | וְקַ֥ח | wĕqaḥ | veh-KAHK |
| with | אִתְּךָ֖ | ʾittĕkā | ee-teh-HA |
| thee of the elders | מִזִּקְנֵ֣י | mizziqnê | mee-zeek-NAY |
| of Israel; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and thy rod, | וּמַטְּךָ֗ | ûmaṭṭĕkā | oo-ma-teh-HA |
| wherewith | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| thou smotest | הִכִּ֤יתָ | hikkîtā | hee-KEE-ta |
| בּוֹ֙ | bô | boh | |
| the river, | אֶת | ʾet | et |
| take | הַיְאֹ֔ר | hayʾōr | hai-ORE |
| in thine hand, | קַ֥ח | qaḥ | kahk |
| and go. | בְּיָֽדְךָ֖ | bĕyādĕkā | beh-ya-deh-HA |
| וְהָלָֽכְתָּ׃ | wĕhālākĕttā | veh-ha-LA-heh-ta |