1 ⁽ஆண்டவரின் வாக்கு எனக்கு␢ அருளப்பட்டது:⁾

2 ⁽மானிடா! காட்டிலிருக்கும்␢ எல்லா மரக்கிளைகளையும் விட␢ திராட்சைக் கொடி␢ எவ்வகையில் சிறந்தது?⁾

3 ⁽ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து␢ கட்டை எடுக்கப்படுகிறதா?␢ அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட␢ ஒரு முளையை அதிலிருந்து § செய்வார்களா?⁾

4 ⁽இதோ, அது நெருப்புக்கு␢ இரையாகப் போடப்படுகிறது;␢ அதன் இரு முனைகளையும்␢ நெருப்பு எரிக்கிறது;␢ அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது;␢ அது எந்த வேலைக்காவது பயன்படுமா?⁾

5 ⁽இதோ, அது␢ முழுமையாய் இருந்தபோதே␢ அதைக்கொண்டு ஒரு வேலையும்␢ செய்யமுடியவில்லை.␢ நெருப்பால் எரிந்து கருகிய அதை␢ எந்த வேலைக்காவது § பயன்படுத்த முடியுமா?⁾⒫

6 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; காட்டுத் தாவரங்களுள் ஒன்றான திராட்சைக் கொடியை நான் நெருப்புக்கு இரையாக அளித்தது போல், எருசலேமில் வாழ்வோரையும் கையளிப்பேன்.

7 என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

8 நான் நாட்டைப் பாழாக்குவேன். ஏனெனில், அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Ezekiel 15 ERV IRV TRV