நான் கண்ட இந்தத் தரிசனம், நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.
அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே, ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் முகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.
ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால் மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்.
இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையிலே பலிபீடத்தைச் சுத்தி செய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.
ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.
அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| And if | וְאִֽם | wĕʾim | veh-EEM |
| they be ashamed | נִכְלְמ֞וּ | niklĕmû | neek-leh-MOO |
| of all | מִכֹּ֣ל | mikkōl | mee-KOLE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| they have done, | עָשׂ֗וּ | ʿāśû | ah-SOO |
| shew | צוּרַ֣ת | ṣûrat | tsoo-RAHT |
| them the form | הַבַּ֡יִת | habbayit | ha-BA-yeet |
| of the house, | וּתְכוּנָת֡וֹ | ûtĕkûnātô | oo-teh-hoo-na-TOH |
| and the fashion | וּמוֹצָאָ֡יו | ûmôṣāʾāyw | oo-moh-tsa-AV |
| thereof, and the goings out | וּמוֹבָאָ֣יו | ûmôbāʾāyw | oo-moh-va-AV |
| thereof, and the comings in | וְֽכָל | wĕkol | VEH-hole |
| thereof, and all | צֽוּרֹתָ֡ו | ṣûrōtāw | tsoo-roh-TAHV |
| the forms | וְאֵ֣ת | wĕʾēt | veh-ATE |
| thereof, and all | כָּל | kāl | kahl |
| the ordinances | חֻקֹּתָיו֩ | ḥuqqōtāyw | hoo-koh-tav |
| thereof, and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the forms | צ֨וּרֹתָ֤ו | ṣûrōtāw | TSOO-roh-TAHV |
| thereof, and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the laws | תּֽוֹרֹתָו֙ | tôrōtāw | toh-roh-TAHV |
| thereof: and write | הוֹדַ֣ע | hôdaʿ | hoh-DA |
| it in their sight, | אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM |
| that they may keep | וּכְתֹ֖ב | ûkĕtōb | oo-heh-TOVE |
| לְעֵֽינֵיהֶ֑ם | lĕʿênêhem | leh-ay-nay-HEM | |
| the whole | וְיִשְׁמְר֞וּ | wĕyišmĕrû | veh-yeesh-meh-ROO |
| form | אֶת | ʾet | et |
| thereof, and all | כָּל | kāl | kahl |
| the ordinances | צוּרָת֛וֹ | ṣûrātô | tsoo-ra-TOH |
| thereof, and do | וְאֶת | wĕʾet | veh-ET |
| them. | כָּל | kāl | kahl |
| חֻקֹּתָ֖יו | ḥuqqōtāyw | hoo-koh-TAV | |
| וְעָשׂ֥וּ | wĕʿāśû | veh-ah-SOO | |
| אוֹתָֽם׃ | ʾôtām | oh-TAHM |