நான் கண்ட இந்தத் தரிசனம், நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.
அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே, ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் முகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன்.
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள்.
அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும் அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்குமுன்பாக எழுதிவை.
பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன:
எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையிலே பலிபீடத்தைச் சுத்தி செய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும்.
நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்து எடுத்துப் பலியிடுவாயாக.
ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக.
ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள்.
அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלַ֗י | ʾēlay | ay-LAI |
| me, Son | בֶּן | ben | ben |
| of man, | אָדָם֙ | ʾādām | ah-DAHM |
| אֶת | ʾet | et | |
| the place | מְק֣וֹם | mĕqôm | meh-KOME |
| of my throne, | כִּסְאִ֗י | kisʾî | kees-EE |
| and the place | וְאֶת | wĕʾet | veh-ET |
| of the soles | מְקוֹם֙ | mĕqôm | meh-KOME |
| of my feet, | כַּפּ֣וֹת | kappôt | KA-pote |
| where | רַגְלַ֔י | raglay | rahɡ-LAI |
| אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER | |
| I will dwell | אֶשְׁכָּן | ʾeškān | esh-KAHN |
| in the midst | שָׁ֛ם | šām | shahm |
| of the children | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| for ever, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and my holy | לְעוֹלָ֑ם | lĕʿôlām | leh-oh-LAHM |
| name, | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| shall the house | יְטַמְּא֣וּ | yĕṭammĕʾû | yeh-ta-meh-OO |
| of Israel | ע֣וֹד | ʿôd | ode |
| no | בֵּֽית | bêt | bate |
| more | יִ֠שְׂרָאֵל | yiśrāʾēl | YEES-ra-ale |
| defile, | שֵׁ֣ם | šēm | shame |
| neither they, | קָדְשִׁ֞י | qodšî | kode-SHEE |
| nor their kings, | הֵ֤מָּה | hēmmâ | HAY-ma |
| by their whoredom, | וּמַלְכֵיהֶם֙ | ûmalkêhem | oo-mahl-hay-HEM |
| nor by the carcases | בִּזְנוּתָ֔ם | biznûtām | beez-noo-TAHM |
| of their kings | וּבְפִגְרֵ֥י | ûbĕpigrê | oo-veh-feeɡ-RAY |
| in their high places. | מַלְכֵיהֶ֖ם | malkêhem | mahl-hay-HEM |
| בָּמוֹתָֽם׃ | bāmôtām | ba-moh-TAHM |