அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை.
இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னை விட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்தஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்.
இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.
ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.
பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֵלַ֜י | ʾēlay | ay-LAI |
| unto | יְהוָֹ֗ה | yĕhôâ | yeh-hoh-AH |
| me, Son | בֶּן | ben | ben |
| of man, | אָדָ֡ם | ʾādām | ah-DAHM |
| mark | שִׂ֣ים | śîm | seem |
| well, | לִבְּךָ֩ | libbĕkā | lee-beh-HA |
| and behold | וּרְאֵ֨ה | ûrĕʾē | oo-reh-A |
| with thine eyes, | בְעֵינֶ֜יךָ | bĕʿênêkā | veh-ay-NAY-ha |
| and hear | וּבְאָזְנֶ֣יךָ | ûbĕʾoznêkā | oo-veh-oze-NAY-ha |
| with thine ears | שְּׁמָ֗ע | šĕmāʿ | sheh-MA |
| אֵ֣ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
| say | מְדַבֵּ֣ר | mĕdabbēr | meh-da-BARE |
| unto thee concerning all | אֹתָ֔ךְ | ʾōtāk | oh-TAHK |
| the ordinances | לְכָל | lĕkāl | leh-HAHL |
| of the house | חֻקּ֥וֹת | ḥuqqôt | HOO-kote |
| of the Lord, | בֵּית | bêt | bate |
| and all | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| the laws | וּלְכָל | ûlĕkāl | oo-leh-HAHL |
| thereof; and mark | תּֽוֹרֹתָ֑ו | tôrōtāw | toh-roh-TAHV |
| well | וְשַׂמְתָּ֤ | wĕśamtā | veh-sahm-TA |
| the entering in | לִבְּךָ֙ | libbĕkā | lee-beh-HA |
| of the house, | לִמְב֣וֹא | limbôʾ | leem-VOH |
| with every | הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet |
| going forth | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| of the sanctuary. | מוֹצָאֵ֥י | môṣāʾê | moh-tsa-A |
| הַמִּקְדָּֽשׁ׃ | hammiqdāš | ha-meek-DAHSH |