கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.
அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,
என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.
இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள், தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,
என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.
| Then he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלַי֮ | ʾēlay | ay-LA |
| me, Hast thou seen | הֲרָאִ֣יתָ | hărāʾîtā | huh-ra-EE-ta |
| this, O son | בֶן | ben | ven |
| of man? | אָדָם֒ | ʾādām | ah-DAHM |
| Is it a light thing | הֲנָקֵל֙ | hănāqēl | huh-na-KALE |
| to the house | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
| of Judah | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| that they commit | מֵעֲשׂ֕וֹת | mēʿăśôt | may-uh-SOTE |
| אֶת | ʾet | et | |
| the abominations | הַתּוֹעֵב֖וֹת | hattôʿēbôt | ha-toh-ay-VOTE |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| they commit | עָֽשׂוּ | ʿāśû | ah-SOO |
| here? | פֹ֑ה | pō | foh |
| for | כִּֽי | kî | kee |
| they have filled | מָלְא֨וּ | molʾû | mole-OO |
| אֶת | ʾet | et | |
| the land | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| with violence, | חָמָ֗ס | ḥāmās | ha-MAHS |
| and have returned | וַיָּשֻׁ֙בוּ֙ | wayyāšubû | va-ya-SHOO-VOO |
| to provoke me to anger: | לְהַכְעִיסֵ֔נִי | lĕhakʿîsēnî | leh-hahk-ee-SAY-nee |
| and, lo, | וְהִנָּ֛ם | wĕhinnām | veh-hee-NAHM |
| they put | שֹׁלְחִ֥ים | šōlĕḥîm | shoh-leh-HEEM |
| אֶת | ʾet | et | |
| the branch | הַזְּמוֹרָ֖ה | hazzĕmôrâ | ha-zeh-moh-RA |
| to | אֶל | ʾel | el |
| their nose. | אַפָּֽם׃ | ʾappām | ah-PAHM |