இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.
பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.
அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.
அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,
அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.
ரேயுமாள் என்று பேர் கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.
| And they came | וַיָּבֹ֗אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| to | אֶֽל | ʾel | el |
| the place | הַמָּקוֹם֮ | hammāqôm | ha-ma-KOME |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| God | אָֽמַר | ʾāmar | AH-mahr |
| had told | ל֣וֹ | lô | loh |
| him of; and Abraham | הָֽאֱלֹהִים֒ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| built | וַיִּ֨בֶן | wayyiben | va-YEE-ven |
| שָׁ֤ם | šām | shahm | |
| an altar | אַבְרָהָם֙ | ʾabrāhām | av-ra-HAHM |
| there, | אֶת | ʾet | et |
| and laid the wood | הַמִּזְבֵּ֔חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| in order, | וַֽיַּעֲרֹ֖ךְ | wayyaʿărōk | va-ya-uh-ROKE |
| and bound | אֶת | ʾet | et |
| הָֽעֵצִ֑ים | hāʿēṣîm | ha-ay-TSEEM | |
| Isaac | וַֽיַּעֲקֹד֙ | wayyaʿăqōd | va-ya-uh-KODE |
| his son, | אֶת | ʾet | et |
| and laid | יִצְחָ֣ק | yiṣḥāq | yeets-HAHK |
| him on | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| the altar | וַיָּ֤שֶׂם | wayyāśem | va-YA-sem |
| upon | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| the wood. | עַל | ʿal | al |
| הַמִּזְבֵּ֔חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak | |
| מִמַּ֖עַל | mimmaʿal | mee-MA-al | |
| לָֽעֵצִֽים׃ | lāʿēṣîm | LA-ay-TSEEM |