1 இறைவாக்கினர் அபக்கூக்கு கண்ட காட்சியில் அருளப்பட்ட இறைவாக்கு:

2 ⁽ஆண்டவரே,␢ எத்துணைக் காலத்திற்கு நான்␢ துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்;␢ நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?␢ இன்னும் எத்துணைக் காலத்திற்கு␢ வன்முறையை முன்னிட்டு␢ உம்மிடம் அழுது புலம்புவேன்;␢ நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?⁾

3 ⁽நீர் என்னை ஏன்␢ கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர்,␢ கேட்டினைக் காணச் செய்கின்றீர்?␢ கொள்ளையும் வன்முறையும்␢ என் கண்முன் நிற்கின்றன;␢ வழக்கும் வாதும் எழும்புகின்றன.⁾

4 ⁽ஆதலால் திருச்சட்டம்␢ வலுவற்று பயனற்றுப் போகின்றது.␢ நீதி ஒருபோதும்␢ வெளிப்படுவதில்லை.␢ கொடியோர் நேர்மையுள்ளோரை␢ வளைத்துக் கொள்கின்றனர்.␢ ஆகவே நீதி␢ தடம்புரண்டு காணப்படுகின்றது.⁾

5 ⁽நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ள␢ வேற்றினத்தாரைக்␢ கூர்ந்து கவனியுங்கள்;␢ கவனித்து வியப்பும்␢ திகைப்பும் அடையுங்கள்;␢ ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான்␢ செயல் ஒன்றைச் செய்திடுவேன்;␢ விளக்கிச் சொன்னாலும்␢ அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்.⁾

6 ⁽நான் கல்தேயர் இனத்தை␢ எழுப்பவிருக்கிறேன்;␢ அது பரபரப்பும் கொடுமையும்␢ உடைய இனம்;␢ தங்களுக்குச் சொந்தமில்லாத␢ இருப்பிடங்களைக் கவர,␢ உலகின் ஒரு முனை முதல்␢ மறுமுனைவரை␢ சுற்றித் திரியும் இனம்.⁾

7 ⁽அவர்கள் அச்சமும் திகிலும்␢ உண்டாக்குகின்றவர்கள்;␢ தங்களுடைய நீதியையும்␢ பெருமையையும்␢ தாங்களே உருவாக்குகின்றவர்கள்.⁾

8 ⁽வேங்கையைவிட␢ அவர்களின் குதிரைகள்␢ விரைவாய் ஓடுகின்றன;␢ அவை மாலை வேளையில்␢ திரியும் ஓநாய்களைவிடக் கொடியவை;␢ அவர்களுடைய குதிரை வீரர்கள்␢ பாய்ந்து வருகின்றார்கள்;␢ இரைமேல் பாயும் கழுகைப்போல்␢ பறந்து வருகின்றார்கள்.⁾

9 ⁽அவர்கள் யாவரும்␢ வன்முறை செய்யவே␢ முன்னேறி வருகின்றார்கள்;␢ அவர்கள் முன்னேறும்போது␢ எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள்.␢ மணல்போல␢ எண்ணற்ற மக்களைச் சிறைப்படுத்துகின்றார்கள்.⁾

10 ⁽அரசர்களை அவர்கள்␢ ஏளனம் செய்கின்றார்கள்;␢ அதிகாரிகளை␢ எள்ளி நகையாடுகின்றார்கள்;␢ அரண்களை எல்லாம் பார்த்து␢ நகைக்கின்றார்கள்;␢ மண்மேடுகளை எழுப்பி␢ அவற்றைப் பிடிக்கின்றார்கள்.⁾

11 ⁽அவர்கள் காற்றைப்போல் விரைவாகக்␢ கடந்து போகின்றார்கள்;␢ மறைந்து விடுகின்றார்கள்.␢ தங்கள் வலிமையைக்␢ கடவுளாகக் கருதியதே␢ அவர்கள் செய்த குற்றம்.⁾

12 ⁽ஆண்டவரே, என் கடவுளே,␢ என் தூயவரே␢ தொன்று தொட்டே இருப்பவர்␢ நீர் அல்லவா?␢ நீர்* சாவைக் காண்பதில்லை;␢ ஆண்டவரே, அவர்களை␢ எங்கள் தண்டனைத் தீர்ப்பாய்␢ ஏற்படுத்தியவர் நீரே;␢ புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய்␢ அவர்களை ஆக்கியவரும் நீரே⁾

13 ⁽தீமையைக் காண நாணும்␢ தூய கண்களை உடையவரே,␢ கொடுமையைப் பார்க்கத் தாங்காதவரே,␢ கயவர்களை நீர்␢ ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்?␢ பொல்லாதவர்␢ தம்மைவிட நேர்மையாளரை␢ விழுங்கும்போது␢ நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?⁾

14 ⁽நீர் மானிடரைக்␢ கடல் மீன்கள் போலும்␢ தலைமை இல்லா ஊர்வனபோலும்␢ நடத்துகின்றீர்.⁾

15 ⁽கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும்␢ தூண்டிலால் பிடிக்கின்றார்கள்;␢ வலையால் வாரி இழுக்கின்றார்கள்;␢ தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு␢ அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள்.⁾

16 ⁽ஆதலால், தங்கள் வலைக்குப்␢ பலி செலுத்துகின்றார்கள்;␢ பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்;␢ ஏனெனில் அவற்றாலேயே␢ இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்;␢ அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள்.⁾

17 ⁽அப்படியானால், அவர்கள்␢ தங்கள் வலையில் இருப்பவற்றை␢ ஓயாமல் வெளியே கொட்டி␢ மக்களினங்களை␢ இரக்கமின்றி இடைவிடாமல்␢ கொன்று குவிக்கவும் வேண்டுமோ?⁾

Habakkuk 1 ERV IRV TRV