1 ⁽இஸ்ரயேல் குழந்தையாய் இருந்த␢ போது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்;␢ எகிப்திலிருந்து என் மகனை␢ அழைத்து வந்தேன்.⁾

2 ⁽எவ்வளவுக்கு நான் அவர்களை␢ வருந்தி அழைத்தேனோ,␢ அவ்வளவுக்கு என்னை விட்டுப்␢ பிடிவாதமாய் விலகிப் போனார்கள்;␢ பாகால்களுக்குப் பலியிட்டார்கள்,␢ சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.⁾

3 ⁽ஆனால் எப்ராயிமுக்கு␢ நடைபயிற்றுவித்தது நானே;␢ அவர்களைக் கையிலேந்தியதும் நானே;␢ ஆயினும், அவர்களைக் குணமாக்கியது␢ நானே என்பதை␢ அவர்கள் உணராமற் போனார்கள்.⁾

4 ⁽*பரிவு என்னும் கட்டுகளால்␢ அவர்களைப் பிணைத்து,␢ அன்புக் கயிறுகளால் கட்டி␢ நடத்தி வந்தேன்;␢ அவர்கள் கழுத்தின்மேல் இருந்த␢ நுகத்தை அகற்றினேன்;␢ அவர்கள் பக்கம் சாய்ந்து␢ உணவு ஊட்டினேன்.⁾

5 ⁽எகிப்து நாட்டுக்கே␢ அவர்கள் திரும்பிப் போவார்கள்;␢ அசீரியா அவர்களை அரசாளும்;␢ ஏனெனில் என்னிடம் திரும்பி வர␢ மறுத்துவிட்டார்கள்.⁾

6 ⁽அவர்களுடைய␢ தீய எண்ணங்களை முன்னிட்டு␢ அவர்களின் நகர்களுக்கு எதிராக␢ வாள் பாய்ந்தெழுந்து,␢ அவர்கள் கதவுகளின் தாழ்ப்பாள்களை␢ நொறுக்கிவிட்டு,␢ அவர்களை விழுங்கிவிடும்.⁾

7 ⁽என் மக்கள் என்னை விட்டு␢ விலகிப் போவதிலேயே␢ கருத்தாய் இருக்கிறார்கள்,␢ அவர்கள்மேல்␢ நுகத்தடி பூட்டப்படுவதால்␢ கூக்குரலிடுவார்கள்;␢ அந்த நுகத்தை அகற்றுவார்␢ எவருமில்லை.⁾

8 ⁽எப்ராயிமே! நான் உன்னை␢ எப்படிக் கைவிடுவேன்?␢ இஸ்ரயேலே! உன்னை␢ எப்படிக் கைநெகிழ்வேன்?␢ உன்னை எப்படி␢ அதிமாவைப் போலாக்குவேன்?␢ செபோயிமுக்குச் செய்ததுபோல்␢ உனக்கும் செய்வேனோ?␢ என் உள்ளம் அதை␢ வெறுத்து ஒதுக்குகின்றது,␢ என் இரக்கம் பொங்கி வழிகின்றது.⁾

9 ⁽என் சீற்றத்தின் கனலைக்␢ கொட்டமாட்டேன்;␢ எப்ராயிமை அழிக்கத்␢ திரும்பிவரமாட்டேன்;␢ நான் இறைவன், வெறும் மனிதனல்ல;␢ நானே உங்கள் நடுவிலிருக்கும்␢ தூயவர், ஆதலால், நான்␢ நகர்க்கு எதிராக வரமாட்டேன்.⁾

10 ⁽ஆண்டவராம் என் பின்னே␢ அவர்கள் போவார்கள்;␢ நானும் சிங்கத்தைப் போலக்␢ கர்ச்சனை செய்வேன்;␢ ஆம், நான் கர்ச்சனை செய்வேன்.␢ அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து␢ நடுங்கிக்கொண்டு வருவர்.⁾

11 ⁽எகிப்தினின்று பறவைகள்போலவும்,␢ அசீரியா நாட்டினின்று␢ புறாக்களைப் போலவும்␢ நடுங்கிக் கொண்டு வருவர்;␢ அவர்களைத் தம் வீடுகளுக்கே␢ திரும்பச் செய்வேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

12 ⁽எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று␢ என்னைச் சூழ்ந்துள்ளது;␢ இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம்␢ என்னை வளைத்துக் கொண்டுள்ளது.␢ ஆனால், யூதா␢ இறைவனோடு இன்னும் நடக்கிறான்;␢ தூயவராம் ஆண்டவருக்கு␢ உண்மை உள்ளவனாய் இருக்கிறான்.⁾

Hosea 11 ERV IRV TRV