1 ⁽நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது,␢ எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்;␢ சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்;␢ அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்;␢ திருடன் உள்ளே நுழைகின்றான்;␢ கொள்ளையர் கூட்டம் வெளியே␢ சூறையாடுகின்றது.⁾

2 ⁽அவர்களுடைய தீவினைகளையெல்லாம்␢ நான் நினைவில்␢ வைத்திருக்கின்றேன் என்பதை␢ அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.␢ இப்பொழுது அவர்கள் செயல்களே␢ அவர்களை வளைத்துக் கொண்டன.␢ அவை என் கண்முன் இருக்கின்றன.⁾

3 ⁽தங்கள் தீமையினால் அரசனையும்,␢ தங்கள் பொய்களினால்␢ தலைவர்களையும்␢ அவர்கள் மகிழ்விக்கின்றார்கள்.⁾

4 ⁽அவர்கள் அனைவரும்␢ விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்;␢ எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்;␢ அப்பம் சுடுபவன்␢ மாவைப் பிசைந்தது முதல்␢ புளிப்பேறும்வரையில்␢ கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.⁾

5 ⁽“நம் அரசனின் திருநாள்!”␢ என்று சொல்லித்␢ தலைவர்கள் திராட்சை இரசத்தால்␢ போதையேறிக் கிடந்தார்கள்;␢ அரசனும் ஏளனக்காரரோடு␢ கூடிக் குலாவினான்.⁾

6 ⁽அவர்களின் இதயம் சதித்திட்டத்தால்␢ அடுப்பைப்போல் எரிகின்றது;␢ அவர்களின் கோபத்தீ␢ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்;␢ அது காலையில் நெருப்பைப் போலக்␢ கொழுந்துவிட்டு எரியும்.⁾

7 ⁽அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல்␢ அனலாய் இருக்கின்றார்கள்;␢ தங்களின் ஆட்சியாளர்களை␢ விழுங்குகின்றார்கள்;␢ அவர்களின் அரசர்கள் அனைவரும்␢ வீழ்ச்சியுற்றார்கள்;␢ அவர்களுள் எவனுமே␢ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.⁾

8 ⁽எப்ராயிம் வேற்றினத்தாருடன்␢ கலந்து வாழ்கின்றான்;␢ எப்ராயிம் ஒருபுறம் வெந்த␢ அப்பமாயிருக்கின்றான்;⁾

9 ⁽அன்னியர் அவன் ஆற்றலை␢ உறிஞ்சிவிட்டனர்;␢ அதை அவன் அறியவில்லை.␢ அவனுக்கு நரைவிழுந்துவிட்டது;␢ அதையும் அவன் அறியவில்லை.⁾

10 ⁽இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு␢ எதிராகச் சான்று சொல்கின்றது;␢ ஆயினும், அவர்கள்␢ தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்␢ திரும்பவில்லை;␢ இவை அனைத்திற்குப் பிறகும்␢ அவரைத் தேடவில்லை.⁾

11 ⁽எப்ராயிம்,␢ அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல்␢ இருக்கின்றான்;␢ அவர்கள் எகிப்தைத்␢ துணைக்கு அழைக்கின்றார்கள்;␢ அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.⁾

12 ⁽அவர்கள் போகும்போது, என் வலையை␢ அவர்கள்மேல் விரித்திடுவேன்;␢ வானத்துப் பறவைகளைப்போல␢ அவர்களைக் கீழே விழச் செய்வேன்;␢ அவர்கள் தீச்செயல்களுக்காக*␢ அவர்களைத் தண்டிப்பேன்.⁾

13 ⁽அவர்களுக்கு ஐயோ கேடு!␢ என்னை விட்டு விலகி,␢ அலைந்து திரிகின்றார்கள்;␢ அவர்களுக்கு அழிவுதான்␢ காத்திருக்கின்றது,␢ அவர்கள் எனக்கு எதிராகக்␢ கலகம் செய்தார்கள்;␢ நான் அவர்களை மீட்டு வந்தேன்;␢ ஆனால் அவர்கள்␢ எனக்கு எதிராகப்␢ பொய் சொல்கின்றார்கள்.⁾

14 ⁽தங்கள் உள்ளத்திலிருந்து␢ என்னை நோக்கி அவர்கள்␢ கூக்குரலிடவில்லை,␢ அதற்கு மாறாக,␢ தங்கள் படுக்கைகளில் கிடந்து␢ கதறுகின்றார்கள்;␢ கோதுமைக்காகவும்␢ திராட்சை இரசத்திற்காகவும்,␢ தங்களையே பிய்த்துப்␢ பிடுங்கிக் கொள்கின்றார்கள்;⁾

15 ⁽நானே அவர்களைப் பயிற்றுவித்து,␢ அவர்கள் புயங்களை␢ வலிமையுறச் செய்திருந்தும்␢ எனக்கு எதிராகத்␢ தீங்கு நினைக்கின்றார்கள்.⁾

16 ⁽பாகாலை நோக்கியே*␢ திரும்புகின்றார்கள்;␢ நம்பமுடியாத␢ வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்;␢ அவர்களுடைய தலைவர்கள்␢ நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு␢ வாளால் மடிவார்கள்;␢ இதுவே எகிப்தை முன்னிட்டு␢ அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும்.⁾

Hosea 7 ERV IRV TRV