1 ⁽அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்:␢ ‟ஆண்வடரே, நான் உமக்கு␢ நன்றி சொல்வேன்;␢ நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;␢ இப்பொழுதோ,␢ உம் சினம் தணிந்து விட்டது;␢ நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.⁾

2 ⁽இறைவன் என் மீட்பர்,␢ அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,␢ நான் அஞ்சமாட்டேன்;␢ ஆண்டவரே என் ஆற்றல்,␢ அவரையே பாடுவேன்,␢ என் மீட்பும் அவரே.”⁾

3 ⁽மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்␢ அகமகிழ்வோடு தண்ணீர்␢ முகந்து கொள்வீர்கள்.⁾

4 ⁽அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:␢ ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;␢ அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;␢ மக்களினங்களிடையே␢ அவர்செயல்களை அறிவியுங்கள்;␢ அவர் திருப்பெயர் உயர்க எனப்␢ பறைசாற்றுங்கள்.⁾

5 ⁽ஆண்டவருக்குப் புகழ்ப்பா␢ அமைத்துப் பாடுங்கள்;␢ ஏனெனில் அவர் மாட்சியுறும்␢ செயல்களைப் புரிந்துள்ளார்;␢ அனைத்துலகும் இதை␢ அறிந்துகொள்வதாக.⁾

6 ⁽சீயோனில் குடியிருப்போரே!␢ ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;␢ இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே␢ சிறந்து விளங்குகின்றார்.⁾

Isaiah 12 ERV IRV TRV