1 ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்ட வரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.

2 மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப் படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள்.

3 ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில்,

4 ⁽பாபிலோன் மன்னனுக்கு எதிராக␢ இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு:␢ “ஒடுக்கியவன் ஒழிந்தானே!␢ அவன் ஆணவமும் ஓய்ந்ததே!⁾

5 ⁽தீயோரின் கோலையும்␢ ஆட்சியாளரின் செங்கோலையும்␢ ஆண்டவர் முறித்துப் போட்டார்.⁾

6 ⁽அவர்கள் கோபத்தால் வெகுண்டு␢ அடிமேல் அடியாக மக்களினங்களை␢ அடித்து நொறுக்கினார்கள்;␢ பிற நாட்டினரைத் தொடர்ந்து␢ கொடுமைப்படுத்திக்␢ கடுமையாய் ஆண்டார்கள்.⁾

7 ⁽மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி␢ அமைதியில் மூழ்கியிருக்கின்றது;␢ மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து␢ ஆரவாரம் செய்கின்றது.⁾

8 ⁽தேவதாரு மரங்களும்␢ லெபனோனின் கேதுரு மரங்களும்␢ உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன;␢ ‘நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல்␢ எமை வெட்டி வீழ்த்த␢ எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை’␢ எனப் பாடுகின்றன.⁾

9 ⁽நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக்␢ கீழுள்ள பாதாளம்␢ மகிழ்ச்சியால் பரபரக்கின்றது;␢ உலகின் இறந்த␢ தலைவர்கள் அனைவரும்␢ உன்னை வரவேற்குமாறு␢ அவர்களை எழுப்புகிறது.␢ வேற்றினத்தாரின் அரசர்கள்␢ அனைவரையும்␢ அவர்தம் அரியணையை விட்டு␢ எழச் செய்கிறது.⁾

10 ⁽அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி,␢ “நீயும் எங்களைப்போல்␢ வலுவிழந்து போனாயே!␢ எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!⁾

11 ⁽உன் இறுமாப்பும்␢ உன் வீணைகளின் இசையொலியும்␢ பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன;␢ புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்!␢ பூச்சிகள் உன் போர்வையாகும்!⁾

12 ⁽வைகறைப் புதல்வனாகிய␢ விடி வெள்ளியே!␢ வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே!␢ மக்களினங்களை␢ வலிமை குன்றச் செய்தவனே,␢ வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!⁾

13 ⁽‘நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;␢ இறைவனுடைய␢ விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில்␢ என் அரியணையை ஏற்படுத்துவேன்;␢ வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள␢ பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.⁾

14 ⁽மேகத்திரள்மேல் ஏறி,␢ உன்னதற்கு ஒப்பாவேன்’ என்று␢ உன் உள்ளத்தில் உரைத்தாயே!⁾

15 ⁽ஆனால் நீ பாதாளம் வரை␢ தாழ்த்தப்பட்டாய்;␢ படுகுழியின் அடிமட்டத்திற்குள்␢ தள்ளப்பட்டாயே!⁾

16 ⁽உன்னைக் காண்போர்,␢ உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து,␢ ‘மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும்,␢ அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,⁾

17 ⁽பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி,␢ அதன் நகரங்களை அழித்தவனும்,␢ தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப␢ விடுதலை அளிக்காதிருப்பவனும்␢ இவன் தானோ?’ என்பர்.⁾

18 ⁽மக்களின மன்னர்கள் அனைவரும்␢ அவரவர் உறைவிடங்களில்␢ மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.⁾

19 ⁽நீயோ, அருவருப்பான␢ அழுகிய இலைபோல,␢ உன் கல்லறையிலிருந்து␢ வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;␢ வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு,␢ நாற்றமெடுத்த பிணம்போலக்␢ கிடக்கின்றாய்.⁾

20 ⁽கல்லறையில் அவர்களோடு␢ நீ இடம் பெறமாட்டாய்;␢ ஏனெனில், உன் நாட்டை␢ நீ அழித்து விட்டாய்;␢ உன் மக்களைக் கொன்று போட்டாய்;␢ தீங்கிழைப்போரின் வழிமரபு␢ என்றுமே பெயரற்றுப் போகும்.⁾

21 ⁽மூதாதையரின் தீச்செயல்களை␢ முன்னிட்டு␢ அவர்கள் புதல்வர்களுக்குக்␢ கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்;␢ நாட்டை உரிமையாக்க␢ இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது;␢ பூவுலகின் பரப்பை அவர்கள்␢ நகரங்களால் நிரப்பக்கூடாது.”⁾

22 ⁽“அவர்களுக்கு எதிராக␢ நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார்␢ படைகளின் ஆண்டவர்,␢ “பாபிலோனின் பெயரையும்␢ அங்கே எஞ்சியிருப்போரையும்,␢ வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும்␢ இல்லாதொழிப்பேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

23 ⁽“அந்நாட்டை முள்ளம்பன்றிகளின்␢ இடமாக்குவேன்;␢ சேறும் சகதியும் நிறைந்த␢ நீர்நிலையாக்குவேன்;␢ அழிவு என்னும் துடைப்பத்தால்␢ முற்றிலும் துடைத்துவிடுவேன்”␢ என்கிறார் படைகளின் ஆண்டவர்.⁾

24 ⁽படைகளின் ஆண்டவர்␢ ஆணையிட்டுக் கூறுகின்றார்:␢ “நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்;␢ நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.⁾

25 ⁽என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்;␢ என் மலைகளின் மேல்␢ அவனை மிதித்துப் போடுவேன்;␢ அப்பொழுது அவனது நுகத்தடி␢ அவர்களைவிட்டு அகலும்;␢ அவன் வைத்த சுமை␢ அவர்கள் தோளிலிருந்து இறங்கும்.⁾

26 ⁽மண்ணுலகம் முழுவதையும்பற்றி␢ நான் தீட்டிய திட்டம் இதுவே;␢ பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக␢ நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.⁾

27 ⁽படைகளின் ஆண்டவர்␢ தீட்டிய திட்டத்தைச்␢ சீர்குலைக்க வல்லவன் எவன்?␢ அவர் தம் கையை ஓங்கியிருக்க␢ அதை மடக்கக்கூடியவன் எவன்?”⁾

28 ⁽ஆகாசு அரசன் இறந்த ஆண்டில்␢ இந்தத் திருவாக்கு அருளப்பட்டது.⁾

29 ⁽பெலிஸ்திய நாட்டின்␢ அனைத்து மக்களே,␢ உங்களை அடித்த கோல்␢ முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்;␢ ஏனெனில் பாம்பின் வேரினின்று␢ கட்டுவிரியன் புறப்பட்டு வரும்;␢ அதன் கனியாகப்␢ பறவைநாகம் வெளிப்படும்.⁾

30 ⁽ஏழைகளின் தலைப்பிள்ளைகள்␢ உணவு பெறுவார்கள்;␢ வறியவர்கள் அச்சமின்றி␢ இளைப்பாறுவார்கள்;␢ உன் வழிமரபைப்␢ பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன்,␢ உன்னில் எஞ்சியிருப்போரை␢ நான் கொன்றொழிப்பேன்.⁾

31 ⁽வாயிலே, வீறிட்டு அழு;␢ நகரே, கதறியழு;␢ எல்லாப் பெலிஸ்திய மக்களே;␢ மனம் பதறுங்கள்,␢ ஏனெனில் வடபுறத்திலிருந்து␢ புகையெனப் படை வருகின்றது.␢ அதன் போர்வீரருள்␢ கோழை எவனும் இல்லை.⁾

32 ⁽அந்த நாட்டுத் தூதருக்கு␢ என்ன மறுமொழி கூறப்படும்?␢ “சீயோனுக்கு அடித்தளமிட்டவர்␢ ஆண்டவர்;␢ அவர்தம் மக்களுள் துயருறுவோர்␢ அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.”⁾

Isaiah 14 ERV IRV TRV