1 ⁽எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு␢ அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும்␢ உயிரினங்கள் உடையதோர்␢ நாடு உள்ளது.⁾

2 ⁽அது நாணல் படகுகளில் நீரின்மேலே␢ கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது;␢ விரைவாய்ச் செல்லும் தூதர்களே,␢ உயர்ந்து வளர்ந்து,␢ பளபளப்பான தோலுடைய␢ இனத்தாரிடம் செல்லுங்கள்;␢ அருகிலும் தொலைவிலும் உள்ளோரை␢ அச்சுறுத்திய␢ மக்கள் கூட்டத்தார் அவர்கள்;␢ ஆற்றல் வாய்ந்தவர்கள்,␢ பகைவரை மிதித்து␢ வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்;␢ ஆறுகள் குறுக்காகப்␢ பாய்ந்தோடும் நாடும் அது.⁾

3 ⁽உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே,␢ மண்ணுலகில் வாழ்வோரே,␢ மலைகளின்மேல் கொடியேற்றும்போது␢ உற்று நோக்குங்கள்;␢ எக்காளம் ஊதும்போது␢ செவிகொடுங்கள்;⁾

4 ⁽ஏனெனில், ஆண்டவர் என்னிடம்␢ இவ்வாறு சொன்னார்:␢ ‟பகலில் அடிக்கும்␢ வெப்பம் குறைந்த வெயில்போலும்,␢ அறுவடைக்கால வெயிலால்␢ உண்டாகும் பனிமேகம் போன்றும்␢ என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து␢ நான் கவனித்துப் பார்ப்பேன்”⁾

5 ⁽ஏனெனில், அறுவடைக்கு முன்␢ பூக்கள் பூத்துக் காய்த்து,␢ கனிதரும் பருவம் எய்தும்போது,␢ தழைகளை எதிரி␢ அரிவாள்களால் அறுத்தெறிவான்;␢ படரும் கொடிகளை § அரிந்து அகற்றிவிடுவான்.⁾

6 ⁽அவை அனைத்தும், மலைகளில்␢ பிணந்தின்னும் பறவைகளுக்கும்␢ தரையில் வாழுகின்ற␢ விலங்குகளுக்கும் விடப்படும்.␢ பிணந்தின்னும் பறவைகள்␢ கோடைக் காலத்திலும்␢ தரை வாழும் விலங்குகள்␢ குளிர்காலத்திலும் §அவற்றின் மேல் தங்கியிருக்கும்.⁾⒫

7 உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.

Isaiah 18 ERV IRV TRV