1 கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:⁽தென்னாட்டிலிருந்து␢ சுழல்காற்றுகள் வீசுவதுபோல்,␢ அச்சம்தரும் நாடான␢ பாலைநிலத்திலிருந்து␢ அழிவு வருகின்றது.⁾

2 ⁽கொடியதொரு காட்சி␢ எனக்குக் காண்பிக்கப்பட்டது:␢ நம்பிக்கைத் துரோகி␢ துரோகம் செய்கின்றான்;␢ நாசக்காரன் நாசம் செய்கின்றான்.␢ ‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு;␢ மேதியாவே! முற்றுகையிடு’␢ அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் § முடிவு வரச் செய்வேன்.⁾

3 ⁽ஆதலால், என் அடிவயிறு␢ வேதனையால் துடிக்கிறது.␢ பெண்ணின் பேறுகால வேதனைக்கு␢ ஒத்த வேதனைகள்␢ என்னைக் கவ்விக்கொண்டன;␢ கலக்கமடைந்து␢ செவிடன் போல் ஆனேன்;␢ திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.⁾

4 ⁽என் மனம் பேதலிக்கிறது;␢ திகில் என்னை ஆட்கொண்டது;␢ நான் நாடிய கருக்கல் வேளை␢ என்னை நடுக்கமுறச் செய்கிறது.⁾

5 ⁽பந்தி தயார் செய்கிறார்கள்;␢ கம்பளத்தை விரிக்கிறார்கள்;␢ உண்கிறார்கள், குடிக்கிறார்கள்;␢ தலைவர்களே, எழுங்கள்;␢ கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.⁾

6 ⁽ஏனெனில் என் தலைவர்␢ எனக்குக் கூறியது இதுவே:␢ “நீ போய்க்␢ காவலன் ஒருவனை நிறுத்திவை;␢ தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.⁾

7 ⁽இருவர் இருவராய்க்␢ குதிரைப்படை வீரர்கள்␢ அணிவகுத்து வருவதையும்,␢ கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும்␢ வீரர்கள் ஏறி வருவதையும்␢ அவன் காணும்போது␢ மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.”⁾

8 ⁽அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்:␢ “என் தலைவரே, பகல்முழுவதும்␢ நான் காவல் மாடத்தின்மேல்␢ நின்று கொண்டிருக்கின்றேன்;␢ இரவெல்லாம் என் பணியில்␢ நிறுத்தப்பட்டுள்ளேன்.⁾

9 ⁽இதோ, ஒரு சோடிக்␢ குதிரைகள் பூட்டப்பட்ட தேரில்,␢ ஏறி ஒருவர் வருகின்றார்.␢ அவர் பதிலுரையாக,␢ ‘பாபிலோன் வீழ்ந்தது,␢ வீழ்ச்சியடைந்து விட்டது;␢ அதன் தெய்வங்களின்␢ சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி␢ உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.”⁾

10 ⁽போரடிக்கப்பட்டுக் களத்தில்␢ சிதறிக் கிடக்கும் என் மக்களே,␢ இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின்␢ ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை␢ நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.⁾

11 ⁽தூமாவைப் பற்றிய திருவாக்கு:␢ சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு,␢ “சாமக்காவலனே,␢ இரவு எப்போது முடியும்?␢ சாமக்காவலனே,␢ இரவு எப்போது முடியும்?”␢ என்று ஒருவர் கேட்க,⁾

12 ⁽“காலை வருகிறது, அவ்வாறே இரவும்;␢ கேட்பதென்றால் கேளுங்கள்,␢ மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று␢ சாமக்காவலன் கூறினான்.⁾

13 ⁽அரேபியாவைக் குறித்த திருவாக்கு:␢ தெதானின் வணிகப் பயணிகளே!␢ அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில்␢ நீங்கள் கூடாரம் அடியுங்கள்;⁾

14 ⁽தேமா நாட்டில் குடியிருப்போரே!␢ தாகமுற்றோர்க்குத்␢ தண்ணீர் கொண்டு வாருங்கள்;␢ அகதிகளை␢ உணவுடன் சென்று சந்தியுங்கள்.⁾

15 ⁽ஏனெனில், வாள்களுக்குத் தப்பி␢ அவர்கள் ஓடுகின்றார்கள்;␢ உருவிய வாளுக்கும்,␢ நாணேற்றிய வில்லுக்கும்␢ போரின் கடுமைக்கும் அஞ்சி␢ ஓடுகின்றார்கள்.⁾⒫

16 என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.

17 கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.

Isaiah 21 ERV IRV TRV