1 ⁽அந்நாளில் யூதா நாட்டில் இந்தப்␢ பாடல் பாடப்படும்: நமக்கொரு␢ வலிமைமிகு நகர் உண்டு;␢ நம்மைக் காக்க அவர்␢ கொத்தளங்களை அமைத்துள்ளார்;⁾

2 ⁽வாயில்களைத் திறந்துவிடுங்கள்;␢ அவர்மீது நம்பிக்கை கொண்ட␢ நேர்மையான மக்களினம்␢ உள்ளே வரட்டும்.⁾

3 ⁽அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்;␢ உம்மீது நம்பிக்கை உடையவர்கள்;␢ அவர்களை அமைதியால்␢ நீர் உறுதிப்படுத்துகின்றீர்.⁾

4 ⁽ஆண்டவர்மீது என்றென்றும்␢ நம்பிக்கை கொள்ளுங்கள்;␢ ஏனெனில், ஆண்டவர்,␢ என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!⁾

5 ⁽உயரத்தில் வாழ்வோரை␢ அவர் தாழ்த்துகின்றார்;␢ வானுற உயர்ந்த நகரைத்␢ தகர்க்கின்றார்;␢ அதைத் தரைமட்டமாக்கி,␢ புழுதியோடு புழுதியாக,␢ மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார்.⁾

6 ⁽காலடிகள் — எளியோரின் காலடிகளும்␢ ஏழைகளின் பாதங்களும் —␢ அதை மிதிக்கும்.⁾

7 ⁽நீதிமான்களின் நெறிகள் நேரியவை;␢ நீர் நேர்மையாளரின் வழியைச்␢ செம்மையாக்குகின்றீர்.⁾

8 ⁽ஆண்டவரே, உமது நீதியின்␢ நெறியில் நடந்து,␢ உமக்காகக் காத்திருக்கிறோம்,␢ உமது திருப்பெயரும் உமது நினைவும்␢ எங்களுக்கு இன்பமாய் உள்ளன.⁾

9 ⁽என் நெஞ்சம் இரவில்␢ உம்மை நாடுகின்றது;␢ எனக்குள்ளிருக்கும் ஆவி␢ ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது;␢ உம் நீதித்தீர்ப்புகள்␢ நிலவுலகில் நிலைத்திருக்கையில்␢ வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.⁾

10 ⁽கொடியவர்களுக்கு நீர்␢ இரக்கம் காட்டினாலும்␢ அவர்கள் நேரியன செய்யக்␢ கற்றுக் கொள்வதில்லை;␢ நேர்மை நிறைந்த நாட்டில்␢ அவர்கள் அநீதி செய்கின்றனர்;␢ ஆண்டவரின் மாட்சியை␢ அவர்கள் காண்பதில்லை.⁾

11 ⁽ஆண்டவரே, ஓங்கிய உம் கையை␢ அவர்கள் காண்பதில்லை;␢ உம் மக்கள்மீது நீர் கொண்ட␢ பேரார்வத்தை அவர்கள் கண்டு␢ நாணட்டும்!␢ உம் பகைவர்களுக்காக மூட்டிய தீ␢ அவர்களை விழுங்கட்டும்!⁾

12 ⁽ஆண்டவரே, நிறைவாழ்வை␢ நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்!␢ ஏனெனில்,␢ எங்கள் செயல்கள் அனைத்தையும்␢ எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.⁾

13 ⁽எங்கள் கடவுளாகிய ஆண்டவரே,␢ உம்மைத்தவிர வேறு தலைவர்கள்␢ எங்கள்மேல் ஆட்சி செலுத்தினார்கள்;␢ ஆனால், உமது பெயரைமட்டுமே␢ நாங்கள் போற்றுகின்றோம்.⁾

14 ⁽அவர்கள் செத்து மடிந்தார்கள்,␢ இனி உயிர்வாழ மாட்டார்கள்.␢ அவர்களின் நிழல்கள்␢ உயிர்பெற்றெழ மாட்டா;␢ ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து,␢ அழித்துவிட்டீர்;␢ அவர்களைப் பற்றிய நினைவுகள்␢ யாவற்றையும் இல்லாதொழித்தீர்.⁾

15 ⁽இந்த இனம் வளரச் செய்தீர்;␢ ஆண்டவரே, இந்த இனம் வளரச் செய்தீர்;␢ நீர் மாட்சியுடன் விளங்குகின்றீர்;␢ நாட்டின் எல்லைகள் அனைத்தையும்␢ விரிவுபடுத்தினீர்.⁾

16 ⁽ஆண்டவரே, துயரத்தில்␢ உம்மைத் தேடினோம்;␢ நீர் எங்களைத் தண்டிக்கும்போது,␢ உம்மை நோக்கி மன்றாடினோம்.⁾

17 ⁽பேறுகாலம் நெருங்குகையில்,␢ கருவுற்றவள் தன் வேதனையில்␢ வருந்திக் கதறுவதுபோல்,␢ ஆண்டவரே, நாங்களும்␢ உம் முன்னிலையில் இருக்கின்றோம்!⁾

18 ⁽நாங்களும் கருவுற்று␢ வேதனையில் துடித்தோம்; ஆனால்,␢ காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்;␢ நாடு விடுதலை பெற,␢ நாங்கள் எதையும் சாதிக்கவில்லை;␢ உலகில் குடியிருக்க,␢ எவரும் பிறக்கப் போவதில்லை.⁾

19 ⁽இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்;␢ அவர்களின் உயிரற்ற உடல்கள்␢ மீண்டும் எழும்;␢ புழுதியில் வாழ்வோரே,␢ விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்;␢ ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி␢ ஒளியின் பனி;␢ இறந்தோர் நிழல்களின் நாட்டிலும்␢ அதை விழச்செய்கின்றீர்.⁾

20 ⁽என் மக்களே! நீங்கள் போய் உங்கள்␢ அறைக்குள் நுழைந்து, உள்ளிருந்து␢ கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்;␢ கடும் சினம் தணியும்வரை␢ சற்று ஒளிந்து கொள்ளுங்கள்.⁾

21 ⁽மண்ணுலகில் வாழ்வோர்␢ தமக்கு எதிராகச் செய்த␢ தீச் செயலுக்குத் தண்டனை வழங்க,␢ ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து␢ புறப்படுகின்றார்;␢ மண்ணுலகம் தன் இரத்தப்பழியை␢ வெளிக் கொணரும்;␢ அதில் கொலை செய்யப்பட்டவர்களை␢ இனியும் இது மூடிமறைக்காது.⁾

Isaiah 26 ERV IRV TRV