1 ⁽இதோ, ஓர் அரசர் நேர்மையுடன்␢ அரசாள்வார்; தலைவர்களும்␢ நீதியோடு ஆட்சி செய்வர்;⁾

2 ⁽ஒவ்வொருவரும் காற்றுக்கு␢ ஒதுங்கிடமாகவும்␢ புயலுக்குப் புகலிடமாகவும்␢ வறண்ட நிலத்தில்␢ நீருள்ள கால்வாய் போலும்␢ காய்ந்த மண்ணில் பெரும் குன்றின்␢ நிழல் போலும் இருப்பர்.⁾

3 ⁽அப்பொழுது பார்வை உடையவரின்␢ கண்கள் மறைக்கபட்டிரா.␢ கேள்வியுடையவரின் செவிகள்␢ அடைக்கப்பட்டிரா.⁾

4 ⁽பதறும் நெஞ்சங்கள்␢ அறிவை உணர்ந்துகொள்ளும்;␢ திக்குவாயரின் வாய்␢ தயக்கமின்றித் தெளிவுடன் பேசும்.⁾

5 ⁽மூடர் இனிச்␢ சான்றோர் என அழைக்கப்படார்;␢ கயவர் இனிப்␢ பெரியோர் எனக்கருதப்படார்;⁾

6 ⁽ஏனெனில், மூடர்␢ மடமையாய்ப் பேசுகின்றனர்;␢ அவர்களின் மனம்␢ தீமை செய்யத் திட்டமிடும்;␢ அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித்␢ தீச்செயல் செய்வதையே நாடும்;␢ அவர்கள் ஆண்டவரைப்பற்றித்␢ தவறாகவே பேசுவர்;␢ பசித்தோரின் பசி போக்கமாட்டார்;␢ தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார்.⁾

7 ⁽கயவரின் நயவஞ்சகச் செயல்கள்␢ தீமையானவை;␢ வறியோர் வழக்கில் நீதி இருப்பினும்,␢ வஞ்சக வார்த்தைகளால்␢ ஏழைகளை அழிக்கும் தீங்கானவற்றை␢ அவர்கள் திட்டமிடுகின்றனர்.⁾

8 ⁽சான்றோர் உயர்வானவற்றைச்␢ சிந்திக்கின்றனர்;␢ அவர்கள் சான்றாண்மையில்␢ நிலைத்து நிற்பர்.⁾

9 ⁽பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து␢ என் குரலுக்குச் செவிகொடுங்கள்;␢ கவலையற்ற புதல்வியரே,␢ என் வார்த்தையைக் கேளுங்கள்.⁾

10 ⁽கவலையற்ற பெண்களே,␢ ஓராண்டும் சில நாள்களும் சென்றபின்␢ நீங்கள் நடுநடுங்குவீர்கள்.␢ ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்;␢ கனிகொய்யுங் காலம் இனி வராது.⁾

11 ⁽பகட்டாக வாழும் மங்கையரே,␢ அஞ்சி நடுங்குங்கள்;␢ கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்;␢ உடைகளை உரிந்து, களைந்து␢ இடையில் சாக்கு உடையைக்␢ கட்டிக் கொள்ளுங்கள்.⁾

12 ⁽செழுமையான வயல்களைக் குறித்தும்␢ வளமான திராட்சைத் தோட்டத்தை␢ முன்னிட்டும்␢ மாரடித்து ஓலமிட்டு அழுங்கள்.⁾

13 ⁽முட்களும் முட்புதர்களும்␢ ஓங்கி வளர்ந்துள்ள␢ என் மக்களின் நிலத்திற்காகவும்␢ களிப்புமிகு நகரில் உள்ள␢ மகிழ்ச்சி நிறை இல்லங்கள்␢ அனைத்திற்காகவும் அழுங்கள்.⁾

14 ⁽அரண்மனை பாழடையுமாறு விடப்படும்;␢ ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்;␢ குன்றும் காவல் மாடமும்␢ என்றுமுள குகைகளாகும்;␢ அங்குக் காட்டுக் கழுதைகள்␢ களிப்படையும்; மந்தைகள் மேயும்.⁾

15 ⁽மீண்டும் உன்னதத்திலிருந்து␢ ஆவி நம்மேல் பொழியப்படும்;␢ பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்;␢ செழுமையான தோட்டம்␢ அடர்ந்த காடாகத் தோன்றும்.⁾

16 ⁽நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்;␢ நேர்மை வளமான வயல்களில் வாழும்.⁾

17 ⁽நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு;␢ நீதியால் விளைவன␢ என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்.⁾

18 ⁽என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும்␢ பாதுகாப்பான கூடாரங்களிலும்␢ தொல்லையற்ற தங்குமிடங்களிலும்␢ குடியிருப்பர்.⁾

19 ⁽ஆனால், காடு அழியக் கல்மழை பொழியும்;␢ நகரம் தாழ்நிலை அடைவது உறுதி.⁾

20 ⁽நீர்வளமிக்க இடங்களில் எல்லாம்␢ பயிர்செய்து␢ தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும்␢ நீங்கள் நற்பேறு பெற்றவர்கள்.⁾

Isaiah 32 ERV IRV TRV