1 ⁽வேற்றினத்தாரே, நெருங்கி வந்து␢ செவிகொடுங்கள்;␢ மக்களினங்களே,␢ கவனித்துக் கேளுங்கள்;␢ மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும்␢ கேட்கட்டும்;␢ வையகமும் அதில் தோன்றுவன யாவும்␢ செவிகொடுக்கட்டும்.⁾

2 ⁽வேற்றினத்தார் அனைவர் மேலும்␢ ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்;␢ அவர்களின் படைத்திரள்␢ முழுவதற்கும் எதிராக␢ வெஞ்சினம் கொண்டுள்ளார்;␢ அவர்களை அவர் அடியோடு அழிப்பார்;␢ அவர்களைப் படுகொலைக்கு␢ உள்ளாக்குவார்.⁾

3 ⁽அவர்களில் வாளுக்கு இரையானோர்␢ தூக்கியெறிப்படுவர்;␢ அவர்களின் பிணங்கள்␢ துர்நாற்றமடிக்கும்;␢ அவர்களின் இரத்தம்␢ மலைகளில் வழிந்தோடும்.⁾

4 ⁽விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும்␢ உருகிப்போகும்; வானின் வெளி ஏட்டுச் சுருளெனச்␢ சுருட்டப்படும்;␢ திராட்சை இலை உதிர்வதுபோலும்␢ அத்தி இலை வீழ்வதுபோலும்,␢ வான் படைகள் அனைத்தும்␢ உதிர்ந்து விடும்.⁾

5 ⁽ஆண்டவரது வாள் வானில்␢ வெளியேறக் குடித்துள்ளது;␢ இதோ, ஏதோமின் மேலும்␢ அழிவுக்கென ஒதுக்கப்பட்ட␢ மக்களினத்தின் மேலும்␢ தண்டனைத் தீர்ப்புக்காக␢ அது இறங்கப்போகிறது.⁾

6 ⁽அவரது வாளில் செம்மறிக்குட்டி,␢ வெள்ளாடு ஆகியவற்றின்␢ இரத்தக் கறை படிந்துள்ளது:␢ அதில் கிடாய்களின்␢ சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது;␢ ஏனெனில், பொட்சராவில்␢ ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்;␢ ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.⁾

7 ⁽அவர்களின் காட்டெருதுகள்␢ செத்துவிழும்;␢ எருதுகளுடன் காளைகளும் மடியும்;␢ அவர்களின் நாடு இரத்தத்தை␢ வெறியேறக் குடிக்கும்;␢ தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.⁾

8 ⁽ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது;␢ சீயோன் வழக்கில்␢ நல்தீர்ப்பீன் ஆண்டு அது.⁾

9 ⁽ஏதோமின் நீரோடைகள் கீலாகும்;␢ அதன் தரைப்புழுதி கந்தகமாகும்;␢ அதன் நிலம்␢ கொழுந்து விட்டெரியும் கீலாகும்.⁾

10 ⁽இரவும் பகலும் அது␢ அணையாமல் எரியும்;␢ அதன் புகை என்றென்றும்␢ எழும்பிக் கொண்டிருக்கும்;␢ தலைமுறை தோறும்␢ நாடு பாழடைந்து கிடக்கும்;␢ எவருமே அதன் வழியாய்␢ ஒருபோதும் பயணம் செய்யார்.⁾

11 ⁽கூகையும் சாக்குருவியும்␢ அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்;␢ ஆந்தையும் கருங்காகமும்␢ அங்கே தங்கியிருக்கும்;␢ ஆண்டவர் நூல்பிடித்து␢ அதை உருக்குலையச் செய்வார்;␢ அவர் தூக்குநூல் பிடித்து␢ அதைப் பாழடையச் செய்வார்.⁾

12 ⁽உயர்குடி மக்கள் அங்கே இல்லை;␢ அரசன் என அழைக்க␢ அங்கே யாரும் இல்லை;␢ அதன் தலைவர் அனைவரும்␢ ஒன்றுமில்லாது ஒழிவர்.⁾

13 ⁽அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும்␢ அதன் அரண்கள்மேல்␢ காஞ்சொறிப் பூண்டுகளும்␢ நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்;␢ அது குள்ள நரிகளின்␢ குடியிருப்பாக மாறும்;␢ ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.⁾

14 ⁽காட்டு விலங்குகள்␢ கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்;␢ காட்டாடுகள் ஒன்றையொன்று␢ கத்தி அழைக்கும்;␢ கூளி அங்கே தங்கித்␢ தான் இளைப்பாறுவதற்கென␢ இடத்தைக் கண்டுபிடிக்கும்.⁾

15 ⁽ஆந்தை அங்கே கூடுகட்டி␢ முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து␢ , தன் நிழலில் அவற்றைச்␢ சேர்த்து வளர்க்கும்;␢ பருந்துகளும் சோடி சோடியாய்ச்␢ சேர்ந்துவரும்.⁾

16 ⁽ஆண்டவரின் ஏட்டுச் சுருளை␢ ஆய்ந்து படியுங்கள்;␢ ‘எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை,␢ துணையின்றி எதுவும் இருப்பதில்லை’␢ ஏனெனில், ஆண்டவரின்␢ வாய் மொழிந்த கட்டளை இது.␢ அவரது ஆவிதான்␢ இவற்றை ஒருங்கிணைத்தது.⁾

17 ⁽அவரே அவர்களுக்கென்று␢ சீட்டுப் போட்டார்;␢ அவர்தம் கை, நூல் பிடித்து␢ நாட்டை அவர்களுக்குப்␢ பகிர்ந்து கொடுத்தது;␢ அவர்கள் அதை என்றுமுள␢ உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;␢ தலைமுறைதோறும்␢ அதில் தங்கி வாழ்வர்.⁾

Isaiah 34 ERV IRV TRV