அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.
ராப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.
இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.
அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டன்.
கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும், அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும், தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.
அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.
| Hearken | אַֽל | ʾal | al |
| not | תִּשְׁמְע֖וּ | tišmĕʿû | teesh-meh-OO |
| to | אֶל | ʾel | el |
| Hezekiah: | חִזְקִיָּ֑הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo |
| for | כִּי֩ | kiy | kee |
| thus | כֹ֨ה | kō | hoh |
| saith | אָמַ֜ר | ʾāmar | ah-MAHR |
| the king | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| of Assyria, | אַשּׁ֗וּר | ʾaššûr | AH-shoor |
| Make | עֲשֽׂוּ | ʿăśû | uh-SOO |
| an agreement with | אִתִּ֤י | ʾittî | ee-TEE |
| me by a present, | בְרָכָה֙ | bĕrākāh | veh-ra-HA |
| and come out | וּצְא֣וּ | ûṣĕʾû | oo-tseh-OO |
| to | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| me: and eat | וְאִכְל֤וּ | wĕʾiklû | veh-eek-LOO |
| ye every one | אִישׁ | ʾîš | eesh |
| of his vine, | גַּפְנוֹ֙ | gapnô | ɡahf-NOH |
| and every one | וְאִ֣ישׁ | wĕʾîš | veh-EESH |
| of his fig tree, | תְּאֵנָת֔וֹ | tĕʾēnātô | teh-ay-na-TOH |
| and drink | וּשְׁת֖וּ | ûšĕtû | oo-sheh-TOO |
| ye every one | אִ֥ישׁ | ʾîš | eesh |
| the waters | מֵי | mê | may |
| of his own cistern; | בוֹרֽוֹ׃ | bôrô | voh-ROH |