ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.
ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?
என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,
கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.
யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.
| O Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| of hosts, | צְבָא֜וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| God | אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of Israel, | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| that dwellest | יֹשֵׁ֣ב | yōšēb | yoh-SHAVE |
| between the cherubims, | הַכְּרֻבִ֔ים | hakkĕrubîm | ha-keh-roo-VEEM |
| thou | אַתָּה | ʾattâ | ah-TA |
| art the God, | ה֤וּא | hûʾ | hoo |
| even thou alone, | הָֽאֱלֹהִים֙ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| of all | לְבַדְּךָ֔ | lĕbaddĕkā | leh-va-deh-HA |
| the kingdoms | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| of the earth: | מַמְלְכ֣וֹת | mamlĕkôt | mahm-leh-HOTE |
| thou | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| hast made | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| עָשִׂ֔יתָ | ʿāśîtā | ah-SEE-ta | |
| heaven | אֶת | ʾet | et |
| and earth. | הַשָּׁמַ֖יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |