1 ⁽விடுதலையை நாடுவோரே,␢ ஆண்டவரைத் தேடுவோரே,␢ எனக்குச் செவிகொடுங்கள்.␢ நீங்கள் எந்தப் பாறையினின்று␢ செதுக்கப்பட்டீர்களோ,␢ எந்தக் குழியினின்று␢ தோண்டப் பட்டீர்களோ,␢ அதை நோக்குங்கள்.⁾

2 ⁽உங்கள் தந்தை ஆபிரகாமையும்␢ உங்களைப் பெற்றெடுத்த சாராவையும்␢ நினைத்துப் பாருங்கள்;␢ தனியனாய் இருந்த␢ அவனை அழைத்தேன்;␢ அவனுக்கு ஆசி வழங்கிப்␢ பெரும் திரளாக்கினேன்.⁾

3 ⁽ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்;␢ பாழடைந்த அதன் பகுதிகள்␢ அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்;␢ அதன் பாலைநிலத்தை␢ ஏதேன்போல் அமைப்பார்;␢ அதன் பாழ் இடங்களை ஆண்டவரின்␢ தோட்டம்போல் ஆக்குவார்.␢ மகிழ்ச்சியும் அக்களிப்பும்␢ அதில் காணப்படும்;␢ நன்றிப்பாடலும் புகழ்ச்சிப் பண்ணும்␢ அங்கே ஒலிக்கும்.⁾

4 ⁽என் மக்களே,␢ நான் சொல்வதைக் கேளுங்கள்;␢ என் இனமே, எனக்குச் செவிகொடு;␢ ஏனெனில் திருச்சட்டம்␢ என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்;␢ என் நீதி மக்களினங்களுக்கு␢ ஒளியாகத் திகழும்.⁾

5 ⁽நான் அளிக்கும் விடுதலை␢ அண்மையில் உள்ளது;␢ நான் வழங்கும் மீட்பு␢ வெளிப்பட்டு விட்டது;␢ என் புயங்கள் மக்களினங்கள்மேல்␢ ஆட்சி செலுத்தும்;␢ என் கைவன்மைமீது␢ அவை நம்பிக்கை கொள்ளும்.⁾

6 ⁽வானத்தை நோக்கிக்␢ கண்களை உயர்த்துங்கள்;␢ கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்;␢ ஏனெனில், வானம் புகையென␢ மறைந்துபோம்;␢ மண்ணுலகம் உடையென நைந்துபோம்;␢ அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்;␢ என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்;␢ என் விடுதலைக்கு முடிவே இராது.⁾

7 ⁽நேர்மைதனை அறிந்தோரே,␢ என் சட்டத்தை இதயத்தே தாங்கும்␢ மக்களினத்தாரே,␢ எனக்குச் செவி கொடுங்கள்;␢ மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்;␢ அவர்தம் இழிசொல் கேட்டுக்␢ கலங்காதீர்கள்.⁾

8 ⁽ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை␢ ஆடையெனத் தின்றழிக்கும்;␢ அரிப்புழு அவர்களை␢ ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்;␢ நான் அளிக்கும் விடுதலையோ␢ என்றென்றும் நிலைக்கும்;␢ நான் வழங்கும் மீட்போ␢ தலைமுறைதோறும் நீடிக்கும்.⁾

9 ⁽விழித்தெழு, விழித்தெழு,␢ ஆண்டவரின் புயமே,␢ ஆற்றலை அணிந்து கொள்;␢ பண்டைய நாள்களிலும்␢ முந்தைய தலைமுறைகளிலும்␢ செய்ததுபோல் விழித்தெழு;␢ இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும்␢ பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும்␢ நீ அன்றோ?⁾

10 ⁽பேராழ நீர்த்திரளாம்␢ கடலை வற்றச்செய்து,␢ ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து,␢ மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும்␢ நீயே அன்றோ?⁾

11 ⁽ஆண்டவரால் மீட்கப்பட்டோர்␢ திரும்பி வருவர்;␢ மகிழ்ந்து பாடிக்கொண்டே␢ சீயோனுக்கு வருவர்;␢ முடிவில்லா மகிழ்ச்சி␢ அவர்கள் தலைமேல் தங்கும்;␢ அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்;␢ துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.⁾

12 ⁽உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர்␢ நானேதான்!␢ மடிந்து போகும் மனிதருக்கும்␢ புல்லென மாயும் மானிடருக்கும்␢ நீ அஞ்சுவது ஏன்?⁾

13 ⁽உன்னை உருவாக்கிய ஆண்டவரை␢ நீ ஏன் மறந்துவிட்டாய்?␢ வானங்களை விரித்துப் பரப்பியவரும்,␢ மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும்␢ அவர் அன்றோ?␢ உன்னை ஒடுக்கி␢ அழித்துவிட முயன்றவன்␢ சீற்றத்தை முன்னிட்டு␢ நீ ஏன் எந்நாளும்␢ ஓய்வின்றி நடுங்குகிறாய்?␢ உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே?⁾

14 ⁽கூனிக் குறுகியவன்␢ விரைவில் விடுதலை பெறுவான்;␢ அவன் குழியில் செத்து வீழ்வதில்லை;␢ அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.⁾

15 ⁽உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!␢ கடலைக் கலக்கி அலைகளைக்␢ கொந்தளிக்கச் செய்பவர் நானே!␢ ‘படைகளின் ஆண்டவர்’ என்பது␢ அவர்தம் பெயராம்!⁾

16 ⁽நான் வானங்களை␢ விரித்துப் பரப்பினேன்;␢ மண்ணுலகிற்கு␢ அடித்தளம் அமைத்தேன்;␢ சீயோனை நோக்கி,␢ “நீ என் மக்கள்” என்றேன்;␢ என் சொற்களை␢ உன் நாவில் அருளினேன்;␢ என் கை நிழலில்␢ உன்னை மறைத்துக்கொண்டேன்.⁾

17 ⁽விழித்தெழு, விழித்தெழு,␢ ஆண்டவர் கையினின்று,␢ சினக் கிண்ணத்தைக் குடித்தவளே,␢ மதியை மயக்கும் அக்கிண்ணத்தை␢ அடிமண்டிவரை குடித்தவளே,␢ எருசலேமே, எழுந்து நில்.⁾

18 ⁽அவள் பெற்றெடுத்த புதல்வருள்␢ அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை;␢ அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள்␢ அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை!⁾

19 ⁽இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன,␢ உனக்காகப் புலம்பியழுபவன் எவன்?␢ வீழ்ச்சி — அழிவு, பஞ்சம் — வாள்␢ இவை உன்னை வாட்டின;␢ யார் உன்னைத் தேற்றுவார்?⁾

20 ⁽உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்;␢ வலையில் சிக்கிய கலைமான் போல்␢ அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும்␢ வீழ்ந்துகிடக்கின்றனர்;␢ ஆண்டவரின் சினத்திற்கும் உன்␢ கடவுளின் கண்டிப்புக்கும் உள்ளாயினர்.⁾

21 ⁽ஆதலால், சிறுமையுற்றவளே,␢ திராட்சை இரசம் இன்றியே␢ குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.⁾

22 ⁽தம் மக்கள் சார்பாக வழக்காடும்␢ உன் கடவுளாகிய ஆண்டவர்,␢ உன் தலைவர் கூறுவது இதுவே:␢ “இதோ, உன்னை␢ மதிமயக்கும் கிண்ணத்தை␢ உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்;␢ என் சினக் கிண்ணத்தினின்று␢ நீ இனிக் குடிக்கவேமாட்டாய்.”⁾

23 ⁽அக்கிண்ணத்தை உன்னை␢ ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்;␢ “நாங்கள் கடந்து செல்வதற்கு␢ நீ முகங்குப்புற விழுந்துகிட” என்று␢ அவர்கள் உன்னிடம் சொன்னார்களே!␢ உன் முதுகை அவர்கள் தரையாகவும்,␢ கடந்து செல்வோருக்குக்குத்␢ தெருவாகவும் மாற்றினார்களே!⁾

Isaiah 51 ERV IRV TRV