1 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ நீதியை நிலைநாட்டுங்கள்,␢ நேர்மையைக் கடைபிடியுங்கள்;␢ நான் வழங்கும் விடுதலை␢ அண்மையில் உள்ளது;␢ நான் அளிக்கும் வெற்றி␢ விரைவில் வெளிப்படும்.⁾

2 ⁽இவ்வாறு செய்யும் மனிதர்␢ பேறு பெற்றவர்;␢ ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது␢ கடைப்பிடித்து,␢ எந்தத் தீமையும் செய்யாது␢ தம் கையைக் காத்துக் கொண்டு,␢ இவற்றில் உறுதியாய் இருக்கும்␢ மானிடர் பேறுபெற்றவர்.⁾

3 ⁽ஆண்டவரோடு தம்மை␢ இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர்,␢ ‘தம் மக்களிடமிருந்து ஆண்டவர்␢ என்னைப் பிரித்துவிடுவது உறுதி’␢ என்று சொல்லாதிருக்கட்டும்;␢ அவ்வாறே அண்ணகனும்,␢ ‘நான் வெறும் பட்டமரம்’ என்று␢ கூறாதிருக்கட்டும்.⁾

4 ⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து,␢ நான் விரும்புகின்றவற்றையே␢ தேர்ந்து கொண்டு,␢ என் உடன்படிக்கையை உறுதியாய்ப்␢ பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,⁾

5 ⁽என் இல்லத்தில்,␢ என் சுற்றுச்சுவர்களுக்குள்␢ நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்;␢ புதல்வர் புதல்வியரைவிடச்␢ சிறந்ததொரு பெயரை வழங்குவேன்;␢ ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை␢ அவர்களுக்குச் சூட்டுவேன்.⁾

6 ⁽ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும்,␢ அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும்,␢ அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும்,␢ தங்களை ஆண்டவரோடு␢ இணைத்துக்கொண்டு␢ ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது␢ கடைப்பிடித்து,␢ தம் உடன்படிக்கையை␢ உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்␢ பிற இன மக்களைக் குறித்து␢ ஆண்டவர் கூறுவது:⁾

7 ⁽அவர்களை நான் என் திருமலைக்கு␢ அழைத்துவருவேன்;␢ இறைவேண்டல் செய்யப்படும்␢ என் இல்லத்தில்␢ அவர்களை மகிழச் செய்வேன்;␢ அவர்கள் படைக்கும் எரிபலிகளும்␢ மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல்␢ ஏற்றுக்கொள்ளப்படும்;␢ ஏனெனில், என் இல்லம்␢ மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய␢ ‘இறைமன்றாட்டின் வீடு’␢ என அழைக்கப்படும்.⁾

8 ⁽சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை␢ ஒருங்கே சேர்க்கும்␢ என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது:␢ அவர்களுள் ஏற்கெனவே␢ கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு␢ ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன்.⁾

9 ⁽வயல்வெளி விலங்குகளே,␢ காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம்␢ இரை விழுங்க வாருங்கள்.⁾

10 ⁽அவர்களின் சாமக்காவலர் அனைவரும்␢ குருடர், அறிவற்றவர்;␢ அவர்கள் அனைவரும்␢ குரைக்க இயலா ஊமை நாய்கள்;␢ படுத்துக்கிடந்து␢ கனவு காண்கின்றவர்கள்;␢ தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.⁾

11 ⁽தீராப் பசிகொண்ட நாய்கள்;␢ நிறைவு என்பதையே அறியாதவர்;␢ பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்;␢ அவர்கள் அனைவரும் அவரவர் தம்␢ வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்;␢ ஒவ்வொருவரும் தம் சொந்த␢ ஆதாயத்தைத் தேடுகின்றனர்.⁾

12 ⁽ஒவ்வொருவரும், ‘வாருங்கள்;␢ நான் திராட்சை இரசம்␢ கொண்டு வருவேன்;␢ போதையேற நாம் மது அருந்துவோம்;␢ நாளை இன்று போலும்␢ இதைவிடச் சிறப்பாகவும்␢ அமையும்’ என்கின்றனர்.⁾

Isaiah 56 ERV IRV TRV