1 ⁽எழு! ஒளிவீசு! உன் ஒளி␢ தோன்றியுள்ளது.␢ ஆண்டவரின் மாட்சி␢ உன்மேல் உதித்துள்ளது!⁾

2 ⁽இதோ! இருள் பூவுலகை மூடும்;␢ காரிருள் மக்களினங்களைக் கவ்வும்;␢ ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்;␢ அவரது மாட்சி உன்மீது தோன்றும்!⁾

3 ⁽பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்;␢ மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி␢ நடைபோடுவர்.⁾

4 ⁽உன் கண்களை உயர்த்தி␢ உன்னைச் சுற்றிலும் பார்;␢ அவர்கள் அனைவரும் ஒருங்கே␢ திரண்டு உன்னிடம் வருகின்றனர்;␢ தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்;␢ உன் புதல்வியர்␢ தோளில் தூக்கி வரப்படுவர்.⁾

5 ⁽அப்பொழுது, நீ அதைக் கண்டு␢ அகமகிழ்வாய்;␢ உன் இதயம் வியந்து விம்மும்;␢ கடலின் திரள் செல்வம்␢ உன்னிடம் கொணரப்படும்;␢ பிற இனத்தாரின் சொத்துகள்␢ உன்னை வந்தடையும்.⁾

6 ⁽ஒட்டகங்களின் பெருந்திரள்␢ உன்னை நிரப்பும்;␢ மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின்␢ இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்;␢ இளம் நாட்டினர் யாவரும்␢ பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர்.␢ அவர்கள் ஆண்டவரின் புகழை␢ எடுத்துரைப்பர்.⁾

7 ⁽கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும்␢ உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்;␢ நெபயோத்தின் கிடாய்கள்␢ உனக்குப் பணிவிடைசெய்யும்;␢ எனக்கு உகந்தவையாக அவை␢ என் பீடத்திற்கு வரும்;␢ இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப்␢ பெருமைப்படுத்துவேன்.⁾

8 ⁽மேகங்கள் போலும்␢ பலகணி நோக்கிப் பறந்து செல்லும்␢ புறாக்கள் போலும்␢ விரைந்து செல்லும் இவர்கள் யார்?⁾

9 ⁽தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்;␢ இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான␢ ஆண்டவரின் பெயரை முன்னிட்டு,␢ உன் பிள்ளைகளைத்␢ தொலையிலிருந்து ஏற்றி வரவும்,␢ வெள்ளியையும், பொன்னையும்␢ அவர்களுடன் எடுத்து வரவும்,␢ தர்சீசின் வணிகக் கப்பல்கள்␢ முன்னணியில் நிற்கும்;␢ ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர்␢ உனக்கு மேன்மை அளித்துள்ளார்.⁾

10 ⁽அன்னிய நாட்டவர்␢ உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்;␢ அவர்களின் மன்னர்␢ உனக்குப் பணிவிடை செய்வர்;␢ ஏனெனில், சினமுற்று␢ நான் உன்னை நொறுக்கினேன்;␢ நான் கனிவுற்று␢ உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.⁾

11 ⁽உன் வாயில்கள்␢ எப்போதும் திறந்திருக்கும்;␢ இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்;␢ பிற இனத்தாரின் செல்வம்␢ உன்னிடம் கொண்டு வரப்படவும்,␢ அவர்களின் மன்னர்␢ ஊர்வலமாய் அழைத்து வரப்படவும்,␢ அவை திறந்திருக்கும்.⁾

12 ⁽உனக்குப் பணிபுரியாத␢ வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்;␢ அவை முற்றிலும் பாழடைந்து போகும்.⁾

13 ⁽லெபனோனின் மேன்மை␢ உன்னை வந்து சேரும்;␢ என் திருத்தூயகத்தைச்␢ சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத்␢ தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம்␢ ஆகியவை கொண்டு வரப்படும்;␢ என் பாதங்களைத் தாங்கும்␢ தலத்தை மேன்மைப்படுத்துவேன்.⁾

14 ⁽உன்னை ஒடுக்கியவரின் புதல்வர்␢ உன்னிடம் தலைவணங்கி வருவர்;␢ உன்னை அவமதித்தவர் அனைவரும்␢ உன் காலடியில் பணிந்து வீழ்வர்;␢ ‘ஆண்டவரின் நகர்’ என்றும்,␢ ‘இஸ்ரயேலின் தூயவரது சியோன்’ என்றும் உன்னை அவர்கள் அழைப்பர்.⁾

15 ⁽நீ கைநெகிழப்பட்டு␢ வெறுத்து ஒதுக்கப்பட்டாய்;␢ உன் வழியே எவரும்␢ பயணம் செய்யவில்லை;␢ நானோ உன்னை என்றென்றும்␢ பெருமைப்படுத்துவேன்;␢ தலைமுறைதோறும்␢ மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.⁾

16 ⁽நீ பிற இனத்தாரின்␢ பாலைப் பருகுவாய்;␢ மன்னர்களின் மார்பிலிருந்து␢ பாலை உறிஞ்சுவாய்;␢ ஆண்டவராகிய நானே␢ உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும்␢ யாக்கோபின் வல்லவரே␢ உன்னை மீட்பவர் என்றும்␢ நீ அறிந்து கொள்வாய்.⁾

17 ⁽வெண்கலத்திற்குப் பதிலாய்ப்␢ பொன்னையும்␢ இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும்␢ மரத்திற்குப் பதிலாய்␢ வெண்கலத்தையும்␢ கற்களுக்குப் பதிலாய்␢ இரும்பையும் கொண்டு வருவேன்;␢ உங்கள் கண்காணியாய்ச்␢ சமாதானத்தையும்␢ உங்களை வேலைவாங்குமாறு␢ நேர்மையையும் நியமிப்பேன்.⁾

18 ⁽உன் நாட்டில் வன்முறை பற்றியும்␢ உன் எல்லைப் பகுதிகளுக்குள்␢ பாழாக்கலும் அழித்தலும் பற்றியும்␢ இனி எந்தப் பேச்சும் எழாது;␢ உன் மதில்களை ‘விடுதலை’ என்றும்␢ உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும்␢ அழைப்பாய்.⁾

19 ⁽கதிரவன் உனக்கு இனிப்␢ பகலில் ஒளிதர வேண்டாம்!␢ பால்நிலவும் உனக்கு␢ ஒளிவீச வேண்டாம்!␢ ஆண்டவரே இனி உனக்கு␢ முடிவிலாப் பேரொளி!␢ உன் கடவுளே இனி உனக்கு மேன்மை!⁾

20 ⁽உன் கதிரவன் ஒருபோதும் மறையான்;␢ உன் நிலா இனித் தேய்ந்து போகாள்;␢ ஆண்டவரே உனக்கு␢ என்றுமுள ஒளியாக இருப்பார்;␢ உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.⁾

21 ⁽உன் மக்கள் அனைவரும்␢ நேர்மையாளராய் இருப்பர்;␢ அவர்கள் நாட்டை என்றென்றும்␢ உரிமையாக்கிக் கொள்வர்;␢ நான் மாட்சியடையுமாறு␢ நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்;␢ என் கைவேலைப்பாடும் அவர்களே.⁾

22 ⁽அவர்களுள் சிறியவர்␢ ஓராயிரமாய்ப் பெருகுவர்;␢ அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்;␢ நானே ஆண்டவர்;␢ ஏற்ற காலத்தில் இதை நான்␢ விரைவாய்ச் செய்து முடிப்பேன்.⁾

Isaiah 60 ERV IRV TRV