அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
| O Lord, | אִם | ʾim | eem |
| though | עֲוֹנֵ֙ינוּ֙ | ʿăwōnênû | uh-oh-NAY-NOO |
| our iniquities | עָ֣נוּ | ʿānû | AH-noo |
| testify | בָ֔נוּ | bānû | VA-noo |
| against us, do | יְהוָ֕ה | yĕhwâ | yeh-VA |
| thou it for thy name's | עֲשֵׂ֖ה | ʿăśē | uh-SAY |
| sake: | לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an |
| for | שְׁמֶ֑ךָ | šĕmekā | sheh-MEH-ha |
| our backslidings | כִּֽי | kî | kee |
| are many; | רַבּ֥וּ | rabbû | RA-boo |
| we have sinned | מְשׁוּבֹתֵ֖ינוּ | mĕšûbōtênû | meh-shoo-voh-TAY-noo |
| against thee. | לְךָ֥ | lĕkā | leh-HA |
| חָטָֽאנוּ׃ | ḥāṭāʾnû | ha-TA-noo |