பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:
காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.
அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.
பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மகாத்தியனாகியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,
எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்
அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,
உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்’ ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.
பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.
ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.
| And now, | וְעַתָּ֞ה | wĕʿattâ | veh-ah-TA |
| behold, | הִנֵּ֧ה | hinnē | hee-NAY |
| I loose | פִתַּחְתִּ֣יךָ | pittaḥtîkā | fee-tahk-TEE-ha |
| thee this day | הַיּ֗וֹם | hayyôm | HA-yome |
| from | מִֽן | min | meen |
| the chains | הָאזִקִּים֮ | hāʾziqqîm | ha-zee-KEEM |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| were upon | עַל | ʿal | al |
| thine hand. | יָדֶךָ֒ | yādekā | ya-deh-HA |
| If | אִם | ʾim | eem |
| it seem good | ט֨וֹב | ṭôb | tove |
| to come | בְּעֵינֶ֜יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| with | לָב֧וֹא | lābôʾ | la-VOH |
| me into Babylon, | אִתִּ֣י | ʾittî | ee-TEE |
| come; | בָבֶ֗ל | bābel | va-VEL |
| and I will look well | בֹּ֚א | bōʾ | boh |
| unto thee | וְאָשִׂ֤ים | wĕʾāśîm | veh-ah-SEEM |
| אֶת | ʾet | et | |
| unto thee: | עֵינִי֙ | ʿêniy | ay-NEE |
| but if | עָלֶ֔יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| it seem ill | וְאִם | wĕʾim | veh-EEM |
| רַ֧ע | raʿ | ra | |
| unto thee | בְּעֵינֶ֛יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| to come | לָבֽוֹא | lābôʾ | la-VOH |
| with | אִתִּ֥י | ʾittî | ee-TEE |
| me into Babylon, | בָבֶ֖ל | bābel | va-VEL |
| forbear: | חֲדָ֑ל | ḥădāl | huh-DAHL |
| behold, | רְאֵה֙ | rĕʾēh | reh-A |
| all | כָּל | kāl | kahl |
| the land | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| is before | לְפָנֶ֔יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| thee: whither | אֶל | ʾel | el |
| it seemeth good | ט֨וֹב | ṭôb | tove |
| and convenient | וְאֶל | wĕʾel | veh-EL |
| הַיָּשָׁ֧ר | hayyāšār | ha-ya-SHAHR | |
| for thee to go, | בְּעֵינֶ֛יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| thither | לָלֶ֥כֶת | lāleket | la-LEH-het |
| go. | שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma |
| לֵֽךְ׃ | lēk | lake |