பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.
அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.
ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது.
அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.
அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரையும் கண்டு சந்தோஷப்பட்டு,
இஸ்மவேல் மிஸ்பாலிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.
கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப் போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான் மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு.
தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.
| Then Ishmael | וַיִּ֣שְׁבְּ׀ | wayyišĕb | va-YEE-sheb |
| carried away captive | יִ֠שְׁמָעֵאל | yišmāʿēl | YEESH-ma-ale |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the residue | שְׁאֵרִ֨ית | šĕʾērît | sheh-ay-REET |
| of the people | הָעָ֜ם | hāʿām | ha-AM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| were in Mizpah, | בַּמִּצְפָּ֗ה | bammiṣpâ | ba-meets-PA |
| even | אֶת | ʾet | et |
| the king's | בְּנ֤וֹת | bĕnôt | beh-NOTE |
| daughters, | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| and all | וְאֶת | wĕʾet | veh-ET |
| the people | כָּל | kāl | kahl |
| that remained | הָעָם֙ | hāʿām | ha-AM |
| in Mizpah, | הַנִּשְׁאָרִ֣ים | hannišʾārîm | ha-neesh-ah-REEM |
| whom | בַּמִּצְפָּ֔ה | bammiṣpâ | ba-meets-PA |
| Nebuzar-adan | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| the captain | הִפְקִ֗יד | hipqîd | heef-KEED |
| of the guard | נְבֽוּזַרְאֲדָן֙ | nĕbûzarʾădān | neh-voo-zahr-uh-DAHN |
| had committed | רַב | rab | rahv |
| to | טַבָּחִ֔ים | ṭabbāḥîm | ta-ba-HEEM |
| Gedaliah | אֶת | ʾet | et |
| the son | גְּדַלְיָ֖הוּ | gĕdalyāhû | ɡeh-dahl-YA-hoo |
| of Ahikam: | בֶּן | ben | ben |
| and Ishmael | אֲחִיקָ֑ם | ʾăḥîqām | uh-hee-KAHM |
| the son | וַיִּשְׁבֵּם֙ | wayyišbēm | va-yeesh-BAME |
| of Nethaniah | יִשְׁמָעֵ֣אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| carried them away captive, | בֶּן | ben | ben |
| and departed | נְתַנְיָ֔ה | nĕtanyâ | neh-tahn-YA |
| to go over | וַיֵּ֕לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| to | לַעֲבֹ֖ר | laʿăbōr | la-uh-VORE |
| the Ammonites. | אֶל | ʾel | el |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| עַמּֽוֹן׃ | ʿammôn | ah-mone |