1 ⁽பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு␢ வாழ்நாளோ குறைவு;␢ வருத்தமோ மிகுதி.⁾

2 ⁽மலர்போல் பூத்து␢ அவர்கள் உலர்ந்து போகின்றனர்␢ ; நிழல்போல் ஓடி␢ அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.⁾

3 ⁽இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?␢ தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?⁾

4 ⁽அழுக்குற்றதினின்று␢ அழுக்கற்றதைக் கொணர முடியுமா?␢ யாராலும் முடியவே முடியாது.⁾

5 ⁽அவர்களுடைய நாள்கள்␢ உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.␢ அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை␢ உம்மிடம் உள்ளது;␢ அவர்கள் கடக்க இயலாத␢ எல்லையைக் குறித்தீர்.⁾

6 ⁽எனவே அவர்களிடமிருந்து␢ உம் பார்வையைத் திருப்பும்;␢ அப்பொழுது, கூலியாள்கள்␢ தம் நாள் முடிவில் இருப்பது போல்,␢ அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.⁾

7 ⁽மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;␢ அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;␢ அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.⁾

8 ⁽அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,␢ அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,⁾

9 ⁽தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;␢ இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.⁾

10 ⁽ஆனால், மனிதர் மடிகின்றனர்;␢ மண்ணில் மறைகின்றனர்;␢ உயிர் போனபின் எங்கே அவர்கள்?⁾

11 ⁽ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;␢ ஆறும் வறண்டு காய்ந்துபோம்.⁾

12 ⁽மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;␢ வானங்கள் அழியும்வரை␢ அவர்கள் எழுவதில்லை;␢ அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.⁾

13 ⁽ஓ! என்னைப் பாதாளத்தில்␢ ஒளித்து வைக்கமாட்டீரா?␢ உமது சீற்றம் தணியும்வரை␢ மறைத்து வைக்கமாட்டீரா?␢ என்னை நினைக்க ஒருநேரம்␢ குறிக்கமாட்டீரா?⁾

14 ⁽மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?␢ எனக்கு விடிவு வரும்வரை,␢ என் போராட்ட நாள்களெல்லாம்␢ பொறுத்திருப்பேன்.⁾

15 ⁽நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;␢ உம் கைவினையாம் என்னைக்␢ காண விழைவீர்.⁾

16 ⁽அப்பொழுது, என் காலடிகளைக்␢ கணக்கிடுவீர்;␢ என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.⁾

17 ⁽என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;␢ என் குற்றத்தை மூடி மறைத்தீர்.⁾

18 ⁽ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;ம்␢ பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.⁾

19 ⁽கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;␢ நிலத்தின் மண்ணை வெள்ளம்␢ அடித்துப்போகும்; இவ்வாறே␢ ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.⁾

20 ⁽ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்;␢ ஒழிந்துபோவான் அவனும்;␢ அவனது முகத்தை உருக்குலைத்து,␢ விரட்டியடிப்பீர்.⁾

21 ⁽புதல்வர்கள் புகழ்பெறினும்␢ அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்␢ அதை அவன் கண்டான் இல்லை.⁾

22 ⁽அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;␢ அவன் புலம்புவது தன் பொருட்டே.⁾

Job 14 ERV IRV TRV