1 சூகியனான பில்தாத் பதிலாக:

2 “தேவனே அரசாள்பவர். ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார். தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.

3 அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது. தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.

4 தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்? மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.

5 தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல. நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.

6 ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.

Job 25 ERV IRV TRV