1 பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:

2 ⁽முதியோரே, இதைக் கேளுங்கள்;␢ நாட்டிலிலுள்ள குடிமக்களே,␢ நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள்;␢ உங்கள் நாள்களிலாவது,␢ உங்கள் தந்தையரின் நாள்களிலாவது␢ இதுபோன்று நடந்ததுண்டோ?⁾

3 ⁽இதைக் குறித்து உங்கள்␢ பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்;␢ உங்கள் பிள்ளைகள்␢ தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்;␢ அவர்களின் பிள்ளைகள்␢ அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.⁾

4 ⁽வெட்டுப் புழு தின்று எஞ்சியதை␢ இளம் வெட்டுக்கிளி தின்றது;␢ இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத்␢ துள்ளும் வெட்டுக் கிளி தின்றது;␢ துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை␢ வளர்ந்த வெட்டுக்கிளி தின்றழித்தது.⁾

5 ⁽குடிவெறியர்களே,␢ விழித்தெழுந்து அழுங்கள்;␢ திராட்சை இரசம் குடிக்கிறவர்களே,␢ நீங்கள் அனைவரும் அந்த இனிப்பான␢ திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்;␢ ஏனெனில், அது உங்கள் வாய்க்கு␢ எட்டாமற் போயிற்று.⁾

6 ⁽ஆற்றல்மிக்க,␢ எண்ணிக்கையில் அடங்காத␢ வேற்றினம் ஒன்று␢ என் நாட்டிற்கு எதிராய்␢ எழும்பி இருக்கின்றது;␢ அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்;␢ பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள்␢ அதற்கு உண்டு.⁾

7 ⁽என்னுடைய திராட்சைக் கொடிகளை␢ அது பாழாக்கிற்று;␢ அத்தி மரங்களை முறித்துப் போட்டது;␢ அவற்றின் பட்டைகளை முற்றிலும்␢ உரித்துக் கீழே எறிந்தது;␢ அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின.⁾

8 ⁽கணவனாக வரவிருந்தவனை␢ இழந்ததால்␢ சாக்கு உடை உடுத்திக் கொள்ளும்␢ கன்னிப் பெண்ணைப்போல்␢ கதறி அழுங்கள்.⁾

9 ⁽ஆண்டவரது இல்லத்தில்␢ தானியப் படையலும் நீர்மப் படையலும்␢ இல்லாமல் ஒழிந்தன.␢ ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்␢ குருக்கள் புலம்பி அழுகின்றார்கள்.⁾

10 ⁽வயல்வெளிகள் பாழாயின;␢ நிலமும் புலம்புகின்றது;␢ ஏனெனில்,␢ தானிய விளைச்சல் அழிவுற்றது;␢ இரசம் தரும் திராட்சைக் கொடிகள்␢ காய்ந்துபோயின;␢ எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள்␢ பட்டுப் போயின.⁾

11 ⁽உழவுத் தொழில் செய்வோரே,␢ கலங்கி நில்லுங்கள்;␢ திராட்சைத் தோட்டக்காரர்களே,␢ அழுங்கள். ஏனெனில்,␢ கோதுமையும் வாற்கோதுமையும்␢ இல்லாமற் போயின;␢ வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.⁾

12 ⁽திராட்சைக் கொடி வாடிப் போகின்றது;␢ அத்தி மரம் உலர்ந்துபோகின்றது;␢ மாதுளை, பேரீந்து, பேரிலந்தை போன்ற␢ வயல்வெளி மரங்கள் யாவும்␢ வதங்குகின்றன;␢ மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு␢ மறைந்து போகின்றது.⁾

13 ⁽குருக்களே,␢ சாக்கு உடை உடுத்திக்கொண்டு § தேம்பி அழுங்கள்;␢ பலிபீடத்தில் பணிபுரிவோரே!␢ அலறிப் புலம்புங்கள்;␢ என் கடவுளின் ஊழியர்களே,␢ சாக்கு உடை அணிந்தவர்களாய் § இரவைக் கழியுங்கள்;␢ ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில்␢ தானியப் படையலும் நீர்மப் படையலும் § இல்லாமற் போயின.⁾

14 ⁽உண்ணா நோன்புக்கென␢ நாள் குறியுங்கள்;␢ வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்;␢ ஊர்ப் பெரியோரையும்␢ நாட்டில் குடியிருப்போர் அனைவரையும்␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்␢ இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்;␢ ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.⁾

15 ⁽மிகக் கொடிய நாள் அந்த நாள்!␢ ஆண்டவரின் நாள் §அண்மையில் உள்ளது;␢ எல்லாம் வல்லவர்␢ அழிவை அனுப்பும் நாளாக அது வரும்;⁾

16 ⁽உணவுப் பொருளெல்லாம்␢ பாழாய்ப் போனதை␢ நம் கண்கள் காணவில்லையா?␢ நம் கடவுளின் இல்லத்திலிருந்து␢ மகிழ்ச்சியும் அக்களிப்பும்␢ இல்லாமற்போனதை § நாம் பார்க்கவில்லையா?⁾

17 ⁽விதைகள் மண்கட்டிகளின் கீழ்␢ மக்கிப்போயின;␢ பண்டசாலைகள் பாழடைந்துவிட்டன;␢ களஞ்சியங்கள் இடிந்து விழுந்தன;␢ கோதுமை விளைச்சல்␢ இல்லாமற் போயிற்று.⁾

18 ⁽காட்டு விலங்கினங்கள்␢ என்னவாய்த் தவிக்கின்றன!␢ மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள்␢ திகைத்து நிற்கின்றன;␢ ஆட்டு மந்தைகளும்␢ இன்னலுற்றுத் தவிக்கின்றன!⁾

19 ⁽ஆண்டவரே, நான்␢ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;␢ பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள்␢ தீக்கிரையாயின;␢ வயல்வெளியிலிருந்த␢ மரங்கள் அனைத்தையும்␢ நெருப்பு சுட்டெரித்துவிட்டது.⁾

20 ⁽நீரோடைகள் வற்றிப்போனதால்␢ காட்டு விலங்குகள் கூட␢ உம்மை நோக்கிக் கதறுகின்றன;␢ பாலைநிலத்திலிருந்த␢ மேய்ச்சல் இடங்களை␢ நெருப்பு விழுங்கிவிட்டது.⁾

Joel 1 ERV IRV TRV