1 ⁽சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்;␢ என்னுடைய திரு மலை␢ மேலிருந்து கூக்குரலிடுங்கள்;␢ நாட்டில் குடியிருப்பவர்கள்␢ அனைவரும் நடுங்குவார்களாக!␢ ஏனெனில், ஆண்டவரின் நாள்␢ வருகின்றது, ஆம்;␢ அது வந்து விட்டது.⁾

2 ⁽அதுவோ இருளும் காரிருளும்␢ கவிந்த நாள்;␢ மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்;␢ விடியற்கால ஒளி␢ மலைகள்மேல் பரவுவதுபோல்␢ ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின்␢ பெருங்கூட்டம் வருகின்றது;␢ இதுபோன்று என்றுமே␢ நிகழ்ந்ததில்லை;␢ இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும்␢ நிகழப்போவதுமில்லை.⁾

3 ⁽அவை வரும்பொழுது␢ தீயும் தணலும் சுட்டெரிக்கும்.␢ அவற்றின் வருகைக்குமுன்␢ நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்;␢ அவை போனபின்போ␢ பாலைநிலம்போல் ஆகிவிடும்;␢ அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது.⁾

4 ⁽பார்வைக்கு அவை␢ குதிரைகள் போலிருக்கின்றன;␢ போர்க் குதிரைகள்போல்␢ அவை விரைந்தோடுகின்றன.⁾

5 ⁽அவை தேர்ப்படைகளின்␢ கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு,␢ சருகுகளைச் சுட்டெரிக்கும்␢ நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி,␢ போருக்கு அணிவகுத்த␢ ஆற்றல் மிக்க படைகள்போல்␢ மலையுச்சிகளின்மேல்␢ குதித்துச் செல்லும்.⁾

6 ⁽அவற்றின் முன்␢ மக்களினத்தார் நடுங்குவர்;␢ அச்சத்தால் எல்லாரின் முகமும்␢ வெளிறிப் போகும்.⁾

7 ⁽அவை போர் வீரர்களைப்போல்␢ தாவி ஓடுகின்றன;␢ படை வீரர்களைப்போல்␢ சுவர்மேல் ஏறுகின்றன;␢ ஒவ்வொன்றும் தனக்குரிய␢ பாதையில் போகின்றது;␢ தங்கள் இலக்கைவிட்டு␢ அவை பிறழ்வதில்லை.⁾

8 ⁽ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை;␢ ஒவ்வொன்றும் தன் வழி␢ தவறாது செல்கின்றது;␢ போர்க் கருவிகளுக்கிடையே␢ சிக்கிக் கொண்டாலும்␢ அவை வரிசை கலையாமல்␢ முன்னேறுகின்றன.⁾

9 ⁽நகருக்குள் பாய்ந்து செல்கின்றன;␢ மதில்மேல் ஓடுகின்றன;␢ வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த்␢ திருடனைப்போல்␢ உள்ளே நுழைகின்றன⁾

10 ⁽அவற்றுக்கு முன்பாக␢ நிலம் நடுங்குகின்றது;␢ வானம் அசைகின்றது;␢ கதிரவனும் நிலவும்␢ இருண்டு போகின்றன;␢ விண்மீன்களும்␢ ஒளி இழந்து போகின்றன.⁾

11 ⁽ஆண்டவர் தம் படைகள்முன்␢ முழக்கம் செய்கின்றார்;␢ அவரது பாளையம் மிக மிகப் பெரிது;␢ அவர் தம் வாக்கை நிறைவேற்ற § ஆற்றல் உடையவர்.␢ ஏனெனில் ஆண்டவரின் நாள்␢ மிகக் கொடியது; அச்சம் தர வல்லது,␢ அதைத் தாங்கிக் கொள்ளக்␢ கூடியவர் எவர்?⁾

12 ⁽“இப்பொழுதாவது␢ உண்ணா நோன்பிருந்து,␢ அழுது புலம்பிக்கொண்டு,␢ உங்கள் முழு இதயத்தோடு␢ என்னிடம் திரும்பி வாருங்கள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

13 ⁽“நீங்கள் உங்கள் உடைகளைக்␢ கிழித்துக்கொள்ள வேண்டாம்,␢ இதயத்தைக் கிழித்துக்கொண்டு␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்␢ திரும்பி வாருங்கள்.”␢ அவர் அருள் நிறைந்தவர்,␢ இரக்கம் மிக்கவர்;␢ நீடிய பொறுமையுள்ளவர்,␢ பேரன்பு மிக்கவர்;␢ செய்யக் கருதிய தீங்கைக் குறித்து␢ மனம் மாறுகின்றவர்.⁾

14 ⁽ஒருவேளை அவர் தம்␢ மனத்தை மாற்றிக்கொண்டு,␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ தானியப் படையலையும் § நீர்மப் படையலையும்␢ நீங்கள் அளிக்குமாறு␢ உங்களுக்கு ஆசி வழங்குவார்.␢ இதை யார் அறிவார்?⁾

15 ⁽சீயோனில் எக்காளம் ஊதி␢ எச்சரியுங்கள்;␢ புனிதமான உண்ணா நோன்புக்கென␢ நாள் குறியுங்கள்;␢ வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.⁾

16 ⁽மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்;␢ புனித கூட்டத்திற்கு § ஏற்பாடு செய்யுங்கள்;␢ முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள்,␢ பிள்ளைகளையும்␢ பால் குடிக்கும் குழந்தைகளையும்␢ ஒருசேரக் கூட்டுங்கள்;␢ மணமகன் தன் அறையை விட்டு␢ வெளியேறட்டும்;␢ மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப்␢ புறப்படட்டும்.⁾

17 ⁽ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள்␢ கோவில் மண்டபத்திற்கும்␢ பலிபீடத்திற்கும் இடையே நின்று␢ அழுதவண்ணம்,␢ “ஆண்டவரே, உம் மக்கள்மீது␢ இரக்கம் கொள்ளும்;␢ உமது உரிமைச்சொத்தை␢ வேற்றினத்தார் நடுவில்␢ நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும்␢ ஆளாக்காதீர்”␢ எனச் சொல்வார்களாக! § ‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ என␢ வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?⁾

18 ⁽அப்பொழுது ஆண்டவர்␢ தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு␢ தம் மக்கள் மீது கருணை காட்டினார்.⁾

19 ⁽ஆண்டவர் தம் மக்களுக்கு␢ மறுமொழியாகக் கூறியது இதுவே:␢ ‘நான் உங்களுக்குக் கோதுமையும்,␢ திராட்சை இரசமும், § எண்ணெயும் தருவேன்;␢ நீங்களும் நிறைவு பெறுவீர்கள்;␢ இனிமேல் வேற்றினத்தார் நடுவில்␢ உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன்.’⁾

20 ⁽வடக்கிலிருந்து வந்த படையை␢ உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு § விரட்டியடிப்பேன்;␢ அதனை வறட்சியுற்றதும் § பாழடைந்ததுமான நிலத்திற்குத்␢ துரத்திவிடுவேன்.␢ அதன் முற்பகுதியைக்␢ கீழைக் கடலுக்குள்ளும்,␢ பிற்பகுதியை␢ மேலைக் கடலுக்குள்ளும் § ஆழ்த்துவேன்.␢ பிண நாற்றமும் தீய வாடையும்␢ அங்கே எழும்பும்;␢ ஏனெனில் அது␢ பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.⁾

21 ⁽நிலமே நீ அஞ்சாதே;␢ மகிழ்ந்து களிகூரு;␢ ஏனெனில், ஆண்டவர்␢ பெரிய காரியங்களைச் செய்தார்.⁾

22 ⁽காட்டு விலங்குகளே,␢ அஞ்சாதிருங்கள்;␢ ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள்␢ பசுமையாய் இருக்கின்றன;␢ மரங்கள் கனி தருகின்றன;␢ அத்திமரமும் திராட்சைக் கொடியும்␢ மிகுந்த கனி கொடுக்கின்றன.⁾

23 ⁽சீயோனின் பிள்ளைகளே,␢ அகமகிழுங்கள்;␢ உங்கள் கடவுளாகிய␢ ஆண்டவரை முன்னிட்டுக் § களிப்படையுங்கள்;␢ ஏனெனில், அவர்␢ தமது நீதியை நிலைநாட்ட␢ உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்;␢ முன்போலவே உங்களுக்கு␢ முன் மாரியையும் பின் மாரியையும்␢ நிறைவாகத் தந்தருளினார்.⁾

24 ⁽போரடிக்கும் களங்களில்␢ கோதுமை நிறைந்திருக்கும்;␢ ஆலைகளில் திராட்சை இரசமும்␢ எண்ணெயும் வழிந்தோடும்.⁾

25 ⁽நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய␢ என் பெரும் படையாகிய␢ வெட்டுப் புழுக்கள்,␢ இளம் வெட்டுக்கிளிகள்,␢ துள்ளும் வெட்டுக்கிளிகள்,␢ வளர்ந்த வெட்டுக்கிளிகள்␢ ஆகியவை அழித்துவிட்ட␢ பருவப் பலன்களை␢ உங்களுக்கு மீண்டும் தருவேன்.⁾

26 ⁽நீங்கள் வேண்டியமட்டும் உண்டு␢ நிறைவடைவீர்கள்;␢ உங்களை வியத்தகு முறையில்␢ நடத்தி வந்த␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்␢ பெயரைப் போற்றுவீர்கள்;␢ இனிமேல் என் மக்கள் ஒருபோதும்␢ நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.⁾

27 ⁽இஸ்ரயேல் நடுவில்␢ நான் இருக்கிறேன் என்றும்,␢ ஆண்டவராகிய நானே␢ உங்கள் கடவுள் என்றும்,␢ என்னையன்றி வேறு␢ எவரும் இல்லையென்றும்␢ நீங்கள் அறிந்துகொள்வீர்கள்;␢ இனிமேல் என் மக்கள் ஒருபோதும்␢ நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.⁾

28 ⁽அதற்குப்பின்பு,␢ நான் மாந்தர் யாவர்மேலும்␢ என் ஆவியைப் பொழிந்தருள்வேன்;␢ உங்கள் புதல்வரும் புதல்வியரும்␢ இறைவாக்கு உரைப்பர்;␢ உங்கள் முதியோர் கனவுகளையும்␢ உங்கள் இளைஞர்கள்␢ காட்சிகளையும் காண்பார்கள்.⁾

29 ⁽அந்நாள்களில், உங்கள் பணியாளர்,␢ பணிப்பெண்கள் மேலும்␢ என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.⁾

30 இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்; எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும்.

31 அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்தமாக மாறும்.

32 அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்; ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் வாழ்வு அடைவர்; ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள்.

Joel 2 ERV IRV TRV